5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நான் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நடிக்கிறேனா? அசேக் செல்வன் விளக்கம்

சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘ப்ளூ ஸ்டார்’ படம் கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திருமணம் முடிந்த பிறகு இந்தப் படம் வெளியானது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நான் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நடிக்கிறேனா? அசேக் செல்வன் விளக்கம்
அசேக் செல்வன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Sep 2024 12:07 PM

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தான் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கினார். இந்த நிலையில் இந்தப் படத்தில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ச்சியாக தெகிடி, பீட்சா II: வில்லா, முப்பரிமாணம், கூட்டத்தில் ஒருவன், ஆரஞ்சு மிட்டாய், ஓ மை கடவுளே என ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்பு குவிந்து வருகிறது. சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘ப்ளூ ஸ்டார்’ படம் கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திருமணம் முடிந்த பிறகு இந்தப் படம் வெளியானது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Also read… மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்… வைரலாகும் தகவல்

இந்த நிலையில் தனுஷின் இட்லி கடை படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார். ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ் இந்த ஆண்டு ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். அவருக்கு தம்பிகளாக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தனர். தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். தனது அக்கா மகனை ஹீரோவாக்கி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ள தனுஷ் அடுத்ததாக இட்லி கடை படத்தை ஆரம்பித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. டைட்டிலே வித்யாசமாக இருப்பதாக கருத்துக்கள் வந்தன.

அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அருண் விஜய் வில்லனாக நடிக்கப் போவதாகவும், ஷாலினி பாண்டே முக்கிய ரோலில் நடிக்கப் போவதாகவும் அசோக் செல்வன் தனுஷின் தம்பியாக நடித்து வருகிறார் என்றும் கோலிவுட்டில் வதந்திகள் கிளம்பின. ஆனால் அசோக் செல்வன் இந்த தகவலை மறுத்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், தற்போது அவர் இயக்கி வரும் இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை. தவறான தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது என அதிரடியாக ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்துள்ளார் அசோக் செல்வன். இதன் மூலம் அசோக் செல்வன் இட்லி கடை திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Latest News