5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜயின் ‘கோட்’ படம் வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் விளக்கம்

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜயின் ‘கோட்’ படம் வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் விளக்கம்
விஜய், அர்ச்சனா கல்பாத்தி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2024 13:24 PM

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக இணையத்தில் தகவல் வைரலான நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்தப் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த முன்னதாக வெளியானது. இதையடுத்து விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ம் தேதி ’கோட்’ படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ மற்றும் கிளிம்ஸ் வீடியோ என அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தது படக்குழு. ’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியானது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விஜய் மற்றும் சினேகாவின் காம்போவில் உருவாகி இருக்கும் இந்த மொலோடி பாடலை கபிலன் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

Also read… ’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’ – நடிகை டாப்ஸி காட்டம்

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சென்சாரில் யு/ஏ சர்ட்டிஃபிக்கேட் கிடைத்திருக்கிறது. இதற்கிடையே படத்தின் கேடிஎம் டைமிங் குறித்த பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘கேடிஎம் டைமிங் குறித்து பல யூகங்களை பார்க்க முடிகிறது. சென்சார் சரியான நடைபெறவும், படத்தை சரியான நேரத்தில் டெலிவரி செய்யவும் நாங்கள் கவனமாக இருக்கிறோம். கேடிஎம் டைம் குறித்து இப்போது எதையும் இப்போதைக்கு நாங்கள் எடுக்கவில்லை. உலகம் முழுவதும் ஷோ டைமிங்கை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

Latest News