5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: நடிகை டாப்ஸி காட்டம்… நடிகர் நாகர்ஜுனா வேதனை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: ’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’ என நடிகை டாப்ஸி காட்டமாக பேசியது முதல் நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டது என இன்று ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சில.

Today’s Cinema News: நடிகை டாப்ஸி காட்டம்… நடிகர் நாகர்ஜுனா வேதனை… டாப் சினிமா செய்திகள்!
டாப் சினிமா செய்திகள்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2024 18:52 PM

இன்றைய சினிமா செய்திகள்: ’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’ என நடிகை டாப்ஸி காட்டமாக பேசியது முதல் நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டது என இன்று ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சில.

’வாழை’ படத்தின் மேக்கிங் வீடியோ

மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’

’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’ என நடிகை டாப்ஸி காட்டமாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் ‘பாப்பரசி’கள் குறித்து நடிகை டாப்சி காட்டமாக பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. ‘நான் பிரபலமான ஒரு நபர், பொது சொத்து கிடையாது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் ‘இல்லை என்றால் இல்லை’ ஆனால், அதுவே நாங்கள் கூறினால் ஏற்க மாட்டார்கள். நான் முதலில் பெண். அதன்பிறகுதான் நடிகை. நான் இப்படி சொல்வதால், இது எனக்கு ஏற்ற தொழில் இல்லை என சிலர் நினைக்கலாம். ஆனால், நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில்,’ என்று தெரிவித்துள்ளார்.

‘கோட்’ படம் வெளியாவதில் சிக்கலா?

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக இணையத்தில் தகவல் வைரலான நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘கேடிஎம் டைமிங் குறித்து பல யூகங்களை பார்க்க முடிகிறது. சென்சார் சரியான நடைபெறவும், படத்தை சரியான நேரத்தில் டெலிவரி செய்யவும் நாங்கள் கவனமாக இருக்கிறோம். கேடிஎம் டைம் குறித்து இப்போது எதையும் இப்போதைக்கு நாங்கள் எடுக்கவில்லை. உலகம் முழுவதும் ஷோ டைமிங்கை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் ‘விருந்து’ பட ட்ரெய்லர்!

சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

எனது கட்டடத்தை எந்தவித அறிவிப்புமின்றி இடித்துள்ளார்கள்

பட்டா இருநதும் எனது கட்டடத்தை எந்தவித அறிவிப்புமின்றி இடித்துள்ளார்கள் என நடிகர் நாகர்ஜுனா வேதனை தெரிவித்துள்ளார்.  “N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். எனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் சில உண்மைகளை பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அருள்நிதி

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் படம், ‘டிமான்ட்டி காலனி’ மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. டிமாண்டி காலனி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி, Bumper படத்தின் இயக்குனர் எம் செல்வகுமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படம் வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தங்கலான் திரைப்படம் வசூல் நிலவரம்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மஞ்சு வாரியரிடம் இழப்பீடு கேட்ட நடிகை

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழில் அசுரன், துணிவு, போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் மஞ்சு வாரியர். அசுரன் படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் பெற்றார். நேற்று இவர் நடிப்பில் ஃபுட்டேஜ் என்ற திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஃபுட்டேஜ் படத்தில் நடித்த சீத்தல் தம்பி என்பவர் மஞ்சு வாரியரிடம் ரூ. 5.75 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மஞ்சு வாரியரின் நிறுவனம் தயாரித்த ஃபுட்டேஜ் என்ற படத்தில் நடிக்கும்போது தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு முக்கிய கரணம் போதுமான பாதுகாப்பு இல்லாததால் தான் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

விடுதலை படத்தின் மூன்றாம் பாகமா? 

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார் நடிகர் சூரி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் வெற்றிமாறன் எடுக்க தொடங்கியுள்ளார். தற்போது வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் விடுதலை முன்றாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News