5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: ரிஷபத்துக்கு மாறும் வியாழன்.. உஷாராக வேண்டிய 3 ராசிகள்..!

ஆவணி மாத பௌர்ணமி தினமான் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ராக்கி பண்டிகை, ஆவணி அவிட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் கொண்டாடப்படுகிறது. அப்படி பார்க்கும்போது ஆகஸ்ட் 20 ஆம் தேதி வியாழன் கிரகம் ரிஷப ராசிக்கு வருகை தருகிறது. நவம்பர் 28 வரை வியாழன் இந்த ராசியில் இருப்பார். வியாழன் ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

Astrology: ரிஷபத்துக்கு மாறும் வியாழன்.. உஷாராக வேண்டிய 3 ராசிகள்..!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 19 Aug 2024 17:30 PM

வியாழன் பெயர்ச்சி: நம்முடைய வாழ்க்கையில் நம்மை சுற்றி பலருக்கும் ஜோதிடத்தில் மீது சாஸ்திர சம்பிரதாயங்கள் மீதும் அளவு கடந்த நம்பிக்கை இருக்கும். ஜோதிட பெயர்ச்சிகளும், கிரகப்பலன்களும் நமக்கான இன்பம், துன்பம், பிரச்னைகள், தீர்வுகள் என அனைத்தையும் நிர்ணயிப்பதாக உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் ஆவணி மாதம் வரும் பௌர்ணமிக்குப் பிறகு வியாழன் பகவான் ராசி மாறுகிறார். இது உலக அளவில் உள்ள மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வியாழனின் ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு மகத்தான லாபங்கள் இருக்கும் என்றும்,  சில ராசிகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி ஆவணி மாத பௌர்ணமி தினமான் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ராக்கி பண்டிகை, ஆவணி அவிட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் கொண்டாடப்படுகிறது. அப்படி பார்க்கும்போது ஆகஸ்ட் 20 ஆம் தேதி வியாழன் கிரகம் ரிஷப ராசிக்கு வருகை தருகிறது. நவம்பர் 28 வரை வியாழன் இந்த ராசியில் இருப்பார். வியாழன் ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

Also Read: Vastu Tips: வீட்டு பிரச்னைகள் சரியாக தயவுசெய்து இந்த தப்பை பண்ணாதீங்க..!

ரிஷபம்: இந்த ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சாரம் செய்வதால் ரிஷப ராசியினருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்கள் மீது மேலதிரிகாரிகள் கடுமையான அதிருப்தி அடைவார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வெற்றியை அடைவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வியாழன் மாற்றத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும். வியாழன் சஞ்சாரத்தின் போது குறிப்பாக பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். மேலும் நீங்கள்  பொருளாதார ரீதியாக பலவீனமாகலாம் என்பதால் சிக்கனமாக செலவழிப்பது நல்லது. திடீரென ஏற்படும் அதிகப்படியான செலவுகளால்  இருப்பு காலியாகலாம்.குடும்பத்தினரின் ஆதரவு இல்லாததால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

Also Read: Tindivanam: வேண்டிய வரங்கள் அருளும் வாசவி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன்!

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன் நட்சத்திரத்தின் சஞ்சாரத்தால் நிதி இழப்பு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்கவோ முதலீடு செய்யவோ கூடாது. முக்கியமான முடிவுகளை இப்போதைக்கு ஒத்திவைக்கவும். உத்தியோகத்தில் பணிபுரியும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரம் அல்ல. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உறவுகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் மனைவியின் வார்த்தைகளை கேட்டு சிந்தித்து முடிவுக்கு வரவும்

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News