5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: பெண்கள் வீட்டில் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்!

வாழ்க்கையில் சில விஷயங்களை சாஸ்திரப்படி கடைபிடித்தால் அதற்கேற்ற பலன்களை பெறலாம் என சொல்லப்படுகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் அவரவர் வயதுக்கேற்ற விஷயங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆறு விஷயங்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Astrology: பெண்கள் வீட்டில் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 27 Aug 2024 08:46 AM

ஜோதிட பலன்கள்: நாம் நம் வாழ்க்கையில் சில விஷயங்களை சாஸ்திரப்படி கடைபிடித்தால் அதற்கேற்ற பலன்களை பெறலாம் என சொல்லப்படுகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் அவரவர் வயதுக்கேற்ற விஷயங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆறு விஷயங்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதனை ஒரு பெண் மிக சரியாக கடைபிடித்தால் அந்த பெண்ணினுடைய குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.  அந்த பெண்ணும் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பாள் என சாஸ்திரம் சொல்கிறது.

சுறுசுறுப்பு: முதலில் காலையில் எழுந்தவுடன் மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும். காலையில் மகிழ்ச்சியாக எழுந்து நன்றாக நீராடி விட்டு முதலில் காலைப் பொழுதை துவங்குகும்போதே சுறுசுறுப்பாக ஒரு பெண் தொடங்க வேண்டும்.  ஒரு பெண் சுறுசுறுப்பாக இருந்தால் தான் ஒரு குடும்பம் சுறுசுறுப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பமே சோம்பேறி தனத்துக்கு ஆளாகிவிடும்.  ஆகவே எப்போதும் சுறுசுறுப்பாகவும்,  மகிழ்ச்சியாகவும் அந்த நாளை பெண் தொடங்க வேண்டும்.

நல்ல ஆடை: இரண்டாவதாக ஒரு பெண் நல்ல ஆடைகளை உடுத்துதல் என்பது மிகவும் அவசியமானது. அது ரொம்ப கஷ்டமான வேலை என நினைக்கலாம். அல்லது இருக்கும் பணிச்சூழலில் எப்போதும் புடவை கட்டிக்கொண்டே இருக்க முடியுமா? என யோசிக்கலாம். ஆனால் புடவை மட்டுமே கட்ட வேண்டும் என்பது இல்லை. நல்ல நாகரீகமான ஆடைகளை அணியலாம். நீங்கள் இரவில் அணியும் ஆடையை பகலிலும் அணிவது கூடாது. திடீரென பகலில் வீட்டுக்கு விருந்தினர் வருகை தரும்போது இரவு ஆடையுடன் இருந்தால் அசௌகரியமாக உணரலாம்.  எனவே பகலில் பெண்கள் மங்களகரமான ஆடையை உடுத்திக் கொண்டு வீட்டில் இருப்பது மகாலட்சுமியின் தோற்றத்தோடு ஒப்பிடப்படுகிறது. அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் இருக்கும் என நம்பப்படுகிறது.

விளக்கேற்றுவது: மூன்றாவதாக விளக்கேற்றி இறைவனை வழிபடுதலை சொல்லலாம்.  அன்றாடம் கண்டிப்பான முறையில் தெய்வத்தை வழிபட வேண்டும். இதில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பாக அமையும். ஒரு வீட்டில் மங்களகரமான விளக்கு காலையும் மாலையும் ஏற்றப்படுகிறபோது அந்த வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அகன்று மகாலட்சுமியினுடைய அருள் அந்த இல்லத்திற்கு பரிபூரணமாக கிடைத்துவிடும் என்பது ஐதீகமாகும்.

மங்களகரமான சொற்களை பேசுதல்:  எப்போதுமே ஒரு பெண் வந்து அமங்கலமான வார்த்தைகள் சொல்லுவதை தவிர்த்து விட வேண்டும். மங்களகரமான வார்த்தைகளை கண்டிப்பாக பேசவேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. அதுமட்டுமல்லாமல் பேசுகிறபோது அந்த பேச்சில் ஒரு நிதானம் இருக்க வேண்டும். இருக்கும் இடத்தில் ஒரு அமைதி இருக்க  வேண்டும். அதேபோல் ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்கின்ற  அந்த உத்வேக திறன் அந்த பேச்சில் இருக்க வேண்டும்.

சிரித்த முகம்: இதில் மிக எளிமையான விஷயம் என்பது சிரித்த முகத்தோடு இருக்க பழகுதல் தான். வாங்க, நல்லா இருக்கீங்களா என நலம் விசாரித்து வரவேற்க வேண்டாம். உங்களுடைய ஒரு சிரிப்பே நீங்கள் எத்தகைய மனநிலையில் ஒருவரை எதிர்கொள்கிறீர்கள் என சொல்லி விடும்.

சுத்தம்: இந்த ஆறில் ரொம்ப ரொம்ப முக்கியமானது சுத்தம். முதலில் நம் மனது தூய்மையாக இருக்க வேண்டும். அதன் பிறகு நம்மை சுற்றி இருக்கக்கூடிய நம்முடைய இடம்,வீடு, பூஜை அறை ஆகியவற்றை ஒரு பெண் சுத்தமாக வைத்துக் கொண்டால் அவள் மகாலட்சுமியாகவே கருதப்படுவாள் என்பது ஐதீகமாகும்.

Latest News