5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips: சமையலறையில் வைக்கப்படும் கல் உப்பால் கடன் தீருமா? – இதைப் படிங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் அறிவுறுத்தல்படி நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் கல் உப்பை வைத்து நாம் செய்யும் பரிகாரம் பண பலனை கொடுப்பது பற்றி பார்க்கலாம். உப்பு ஜாடிக்கு அடியில் பணத்தை வைத்தால் பணம் வரவு அதிகமாக இருக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. அதேசமயம் கல் உப்பு போடப்பட்டிருக்கும் ஜாடியில் இரண்டு பொருட்களை போடுவதன் மூலம் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என சொல்லப்படுகிறது.

Vastu Tips: சமையலறையில் வைக்கப்படும் கல் உப்பால் கடன் தீருமா? – இதைப் படிங்க!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Aug 2024 17:40 PM

வாஸ்து டிப்ஸ்: நம் வீட்டில் பண வரவு அதிகமாக இருக்க வேண்டும், கடன் தீர வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்ற எண்ணங்கள் நம் அனைவரிடத்திலும் இருக்கும். இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றால் வாஸ்து சாஸ்திரங்களின் அறிவுறுத்தல்படி நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் கல் உப்பை வைத்து நாம் செய்யும் பரிகாரம் பண பலனை கொடுப்பது பற்றி பார்க்கலாம். உப்பு ஜாடிக்கு அடியில் பணத்தை வைத்தால் பணம் வரவு அதிகமாக இருக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. அதேசமயம் கல் உப்பு போடப்பட்டிருக்கும் ஜாடியில் இரண்டு பொருட்களை போடுவதன் மூலம் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என சொல்லப்படுகிறது.

மகாலட்சுமி வாசம் செய்யும் உப்பு

சமையலறையில் மிகவும் இன்றி அமையாத உப்பு மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய உணவுப் பொருளாகும். அதனால்தான் ஒரு வீட்டுக்கு புதிதாக குடிபெயர்ந்தவர்களுக்கு முதலில் வாங்கி கொடுப்பது உப்பாக இருக்கிறது. அதே சமயம் அந்த உப்பு வாங்கி கொடுப்பது என்றால் கல் உப்பாக தான் இருக்க வேண்டும். இந்த உப்பு சகல செல்வங்களையும் அள்ளித்தரும் ஐஸ்வர்யமாக பார்க்கப்படுகிறது. இதனை வீட்டில் பயன்படுத்துவதை வைத்து தான் அந்த வீட்டின் பொருளாதாரம் நிலை இருக்கும் என கணிக்கப்படுகிறது.

கல் உப்பு மகாலட்சுமி வடிவம் என்பதால் இதனை வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தால் வீட்டில் எல்லா உணவு பொருட்களும் காலியான பிறகு தான் வாங்கப்படும்.  ஆனால் உப்பு மட்டும் ஏற்கனவே இருந்தாலும் புதிதாக ஒவ்வொரு மாதம் பிறக்கும்போதும் வாங்கி வைக்கப்படும். எந்த வீட்டில் உப்பு நிறைந்திருக்கிறதோ அங்கு செல்வ வளம் அதிகமாக இருக்கும்.

சமையலறையில் உப்பு

சமையலறையில் கிழக்கு பார்த்து தான் நாம் சமைக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் நமக்கு வலது பக்கம் தான் உப்பு இருக்க வேண்டும். அதேபோல் உப்பை பிளாஸ்டிக் பொருட்களில் கொட்டி வைக்க கூடாது.அதற்கு பதிலாக மண் அல்லது பீங்கான் ஜாடிகளைப் பயன்படுத்தலாம். கல் உப்பு இருக்கக்கூடிய ஜாடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த ஜாடியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் கண்டிப்பாக சுத்தம் செய்யக்கூடாது.

உங்கள் வீட்டில் பணம் மழை பொழிய வேண்டும் என்றால் உப்பு ஜாடி  வைத்திருக்கும் இடத்தில் ரூபாய் 1 நாணயத்தை வைத்து அதன் மேல் தான் உப்பு ஜாடியை வைக்கவும். அப்படி வைக்கும்போது நாணயத்தை சிம்மாசனமாகக் கொண்டு அதன் மேல் உப்பாக மகாலட்சுமி அமர்ந்திருக்கிறார் என ஐதீகமாகப் பார்க்கப்படுகிறது. உப்பு வைப்பதால் கடன் பிரச்சினை நீங்கி பொருளாதார நிலை உயரும் என நம்பப்படுகிறது.

தீரும் பொருளாதார பிரச்னை

என்னதான் நாம் பணம் சம்பாதித்தாலும் சில நேரங்களில் நம்முடைய தேவை அதிகரிப்பதால் பணத் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் கடன் வாங்கும் சூழல் உண்டாகிறது. கடனை வாங்கும் எல்லோரும் ஒரு சிலரை தவிர சரியான நேரத்தில் அது அடைப்பது கிடையாது. இதனை கல் உப்பு பரிகாரம் மூலம் சரி செய்யலாம்.  ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும் . அந்த பாட்டிலின் அடியில் சிறிதளவு உப்பு கொட்டிக் கொள்ள வேண்டும். அந்த உப்புக்கு மேலே ஒரு பக்கத்தில் விரலி மஞ்சளை போடவும். மறுபக்கம் வசம்பு வைக்க வேண்டும்.

இதற்கு மேல் மேலும் உப்பை போட்டு பாட்டிலை நிரம்புவது போல் செய்யுங்கள். இந்த பாட்டிலை மூடி அதனை பூஜையறையில் வைக்க வேண்டும். ஒருவேளை பூஜையறையில் வைக்க முடியாதவர்கள் சமையலறையில் யாருக்கும் தெரியாத வகையில் வைக்க வேண்டும். இதனை வழிபடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதனை சமையலறை அல்லது பூஜையில் வைத்து 48 நாட்கள் கழித்து அந்த உப்பை தண்ணீரில் கரைத்து யார் காலும் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இந்தக் கல் உப்பு பரிகாரத்தை காலை 6:00 மணி முதல் ஏழு மணிக்குள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளிக்கிழமை இதே நேரத்தில் செய்யலாம். இதனை செய்வதால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கும். பணவரவு அதிகரித்து பொருளாதார பிரச்சினைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News