5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Armstrong Murder Case: இயக்குனர் நெல்சனுக்கு சிக்கல்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் அதிரடி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து ஒரு மணி நேரமாக  நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Armstrong Murder Case: இயக்குனர் நெல்சனுக்கு சிக்கல்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் அதிரடி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Aug 2024 11:56 AM

இயக்குநர் நெல்சனிடம் விசாரணை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து ஒரு மணி நேரமாக  நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது கணவர் இயக்குனர் நெல்சன் இடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குனர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ச்சியாக இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் மொட்டை கிருஷ்ணன் செல்போன் தொடர்பு இருந்து வந்ததால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் ரௌடியான சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தற்போது குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் அவர் தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்க இன்டர்போல் உதவியை தமிழக போலீசார் நாடியுள்ளனர். மேலும் மொட்டை கிருஷ்ணன் சிங்கப்பூரில் பத்து நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்த நிலையில் அவரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Also Read: திருமணமான 15 நாள்.. திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. புதுமாப்பிள்ளை மரணம்!

இதற்கிடையில், மொட்டைகிருஷ்ணனுடன் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா செல்போனில் உரையாடியதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நெல்சனின் மனைவி மோனிஷா வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 75 லட்சம் மொட்டை கிருஷ்ணன் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.  மேலும் அவர் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மொட்டை கிருஷ்ணனை சந்தித்து பேசியதும் தெரிய வந்துள்ளது .

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னைபாலு, பெண் தாதா மலர்கொடி, அஞ்சலை,  ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Also Read: மனைவி, 5 வயது குழந்தை கழுத்தறுத்து கொலை… கணவன் விபரீத முடிவு.. பகீர் காரணம்!

அது மட்டுமல்ல அதிமுக, திமுக, பாஜக, தமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பியுள்ளது. இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Latest News