5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut : நாளை தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் மின்தடை.. எங்கே தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை (16.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

Tamilnadu Powercut : நாளை தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் மின்தடை.. எங்கே தெரியுமா?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 15 Aug 2024 17:19 PM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை (16.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் எங்கே மின்தடை?

கோயம்புத்தூர்: பாப்பநாயக்கன் பாளையம், பூரணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, செல்லப்பம்பாளையம், மோப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணபுரம் ஆகிய பகுதிகள்.

திருப்பூர்: பல்லடத்தில் கரடிவாவி, அப்பநாயக்கன்பட்டி, எம்சிபி மில், கி.மீ.புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பாளையம், செல்லம்பாளையம், சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம் ஆகியவை. அதேபோல, உடுமலை பகுதியில் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர் ஆகிய பகுதிகள்.

ஈரோடு: கணபதிபாளையம், ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கபதிபாளையம், பச்சாம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம், நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர்,ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம் ஆகிய பகுதிகள்.

அதேபோல, சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம், கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகள்.

மேலும் படிக்க: பாலை எத்தனை முறை காய்ச்ச வேண்டும்? எப்படி காய்ச்ச வேண்டும்? இதுதான் வழிமுறைகள்!

சென்னை:

மணலி : நெடுஞ்செழியன் சாலை, கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், பட சாலை தெரு ஒரு பகுதி, வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி, எலந்தனூர், பொன்னேரி உயர் சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்எம்டிஏ கட்டம்-I & II, துவாரகா நகர், ஆண்டார்குப்பம் சோதனைச் சாவடி, ஏசிசி மெயின் ரோடு, மெட்டல் & இந்தோ டெக், சாத்தங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், வி.பி. நகர், பெரியதோப்பு, சின்னமாத்தூர் சாலை, VOC நகர், புதுக்கோயில் தெரு, சந்தானகிருஷ்ணன் சாலை, விமலாபுரம் ஆகிய பகுதிகள்

அடையாறு: காந்தி நகர் (பகுதி), கால்வாய் வங்கி சாலை, காந்தி நகர் 2வது பிரதான சாலை, 3வது கால்வாய் குறுக்கு சாலை.

Latest News