5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: சென்னை, கோவை, திருப்பூர்.. தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை..

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Powercut: சென்னை, கோவை, திருப்பூர்.. தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை..
கோப்பு புகைப்படம் (pic courtesy: pixabay)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Sep 2024 07:44 AM

தமிழ்நாட்டில் இன்று முக்கிய மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, கோவை. திருப்பூர்,  சென்னையில் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 23 ஆம் தேதியான இன்று கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எங்கே மின்தடை?

சென்னை:

அடையாறு பாலவாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் சாஸ்திரி நகர்: பி. ஆர். எஸ்.நகர், பாரதிதாசன் நகர், சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, பாரதி நகர், அம்பேத்கர் தெரு பகுதி, பள்ளி தெரு, வைத்தியர் தெரு, எம்.ஏ.பி.ஓ., சி.இ., தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, காயதே இ- மில்லத் தெரு, வ.உ.சி.,தெரு ஆகிய பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.

செங்குன்றம்: சோத்துப்பாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலேன், பை பாஸ் ரோடு வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன் முழுதும், கண்ணப்பாளையம் பகுதி, செம்பரம்பாக்கம், தீயம்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர்., நகர், முத்துமாரி அம்மன் நகர் ஆகிய பகுதிகள்.

Also Read: காய்கறிகள் எப்படி எடுத்து கொள்வது நல்லது..? வேகவைத்தா..? பச்சையாகவா..? இங்கே அறியவும்!

பெரம்பலூர்:

பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், செங்குணம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம் ஆகிய பகுதிகள் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்:

கோபால்பட்டி, கே.அய்யாபட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி,மருநுாத்து, கோணப்பட்டி, சாணார்பட்டி, ராகலாபுரம், சக்கிலியன்கொடை, வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி,இராமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

திருவள்ளூர்:

கீழ்கொண்டையார், அரக்கம்பாக்கம், தாமரைப்பாக்கம், N போண்டேஸ்வரம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், கடவூர், அயிலச்சேரி, குருவயல், பூச்சி அத்திப்பேடு, கொடுவள்ளி, கர்பாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை, வெல்டெக் சாலை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர்:

பீளமேடு, பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், விஜி ராவ் நகர், காமதேனு நகர், பிஎஸ்ஜி எஸ்டேட், பிஎஸ்ஜி மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லைத் தோட்டம், வஉசி காலனி, பிகேடி நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

Latest News