5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : தாசில்தார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

Man set fire on Vehicle | கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாசில்தார் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாசில்தார் அலுவலகத்தின் வெளியே தாசில்தாரின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்ற பிரித்விராஜ் என்ற இளைஞர் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

Viral Video : தாசில்தார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 06 Sep 2024 20:23 PM

இணையத்தில் வைரலாகும் வீடியோ : சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் தசில்தார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Actress Sowmya: மகள் என சொல்லி எல்லை மீறிய தமிழ் இயக்குநர்.. பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு

தாசில்தார் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாசில்தார் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாசில்தார் அலுவலகத்தின் வெளியே தாசில்தாரின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்ற பிரித்விராஜ் என்ற இளைஞர் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வாகனம் மீது பற்றி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் அரசு வாகனத்தை சேதப்படுத்தியது, அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தது ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் புகாரை பெற காவல்துறை மறுத்ததால் இளைஞர் ஆத்திரம்

இந்த சம்பவம் குறித்து வெளியான முதற்கட்ட தகவலில், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரித்விராஜ் கடந்த ஜூலை மாதம் சுற்றுலா சென்ற போது காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது தாய் கடந்த ஜூலை 2 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது அவரது புகாரை பெற்றுக்கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த ஜூலை 23 ஆம் தேதி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது தனது தாயின் புகாரை காவல்துறையினர் ஏற்காத காரணத்தால் தாசில்தாரின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Latest News