5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அப்படி போடு..! சென்னையில் மீண்டும் போர்டு நிறுவனம்.. உலக சந்தைகளுக்காக அமைக்கப்படும் என உறுதி..

போர்டு நிறுவனம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. குறிப்பாக இந்திய மக்களிடம் பெரும் ஆதரவை பெற்ற நிருவனம் என்று கூட சொல்லலாம். போர்டு கார்கள் அதன் என்ஜின் மற்றும் தரத்திற்காக புகழ் பெற்றது. போர்டு நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வரவில்லை என்றால் கூட, மக்களிடையே இந்த காரின் மீது இருக்கும் மோகம் இன்றளவும் குறையாமல் இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் கால்தடம் பதித்தால் கூட போர்டு நிறுவனத்திற்கு தனி இடம் உள்ளது.

அப்படி போடு..! சென்னையில் மீண்டும் போர்டு நிறுவனம்.. உலக சந்தைகளுக்காக அமைக்கப்படும் என உறுதி..
கோப்பு புகைப்படம் (pic courtesy: twitter)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 14 Sep 2024 17:31 PM

சென்னையில் போர்டு நிறுவனம்: மீண்டும் இந்திய சந்தையில் பிரவேசிக்க உள்ள ஆட்டோமேக்கர் ஃபோர்டு, அதன் ஃபோர்டு+ வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான தனது சென்னை ஆலையை மீண்டும் உருவாக்க உள்ளதாக தமிழக அரசுக்கு கடிதம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலக சந்தைகளுக்கான உற்பத்தியில் கவனம் செலுத்தும் வகையில் சென்னையில் தயாரிப்பு ஆலை மீண்டும் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தின் போது போர்டு நிறுவனத்துடன் சந்திப்பு நடத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், போர்டு நிறுவனத்துடனான 30 ஆண்டுகால நட்புணர்வை புதுபிக்கும் வகையில், போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


போர்டு நிறுவனம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. குறிப்பாக இந்திய மக்களிடம் பெரும் ஆதரவை பெற்ற நிருவனம் என்று கூட சொல்லலாம். போர்டு கார்கள் அதன் என்ஜின் மற்றும் தரத்திற்காக புகழ் பெற்றது. போர்டு நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வரவில்லை என்றால் கூட, மக்களிடையே இந்த காரின் மீது இருக்கும் மோகம் இன்றளவும் குறையாமல் இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் கால்தடம் பதித்தால் கூட போர்டு நிறுவனத்திற்கு தனி இடம் உள்ளது. 2021 ஆம் ஆண்டு போர்டு நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியான போது மக்களிடையே அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மீண்டும் சென்னையில் போர்டு நிறுவனம் அதன் கால் தடம் பதிக்க உள்ளது.

போர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் குழுமத்தின் தலைவர் கே ஹார்ட் கூறுகையில், “சென்னை ஆலைக்கான பல்வேறு விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்ததில், தமிழக அரசின் தற்போதைய ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த நடவடிக்கையானது, புதிய உலகச் சந்தைகளுக்குச் சேவை செய்வதற்காக, தமிழ்நாட்டில் கிடைக்கும் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதால், இந்தியாவிற்கான நமது தற்போதைய உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

மேலும், “ “போர்டு தற்போது தமிழ்நாட்டில் உலகளாவிய வணிக நடவடிக்கைகளில் 12,000 நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது, அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,500 முதல் 3,000 வேலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. sanand -ல் உள்ள இயந்திர உற்பத்தி நடவடிக்கைகளுடன் இணைந்து, இந்தியா ஃபோர்டின் உலகளவில் இரண்டாவது பெரிய சம்பளம் பெறும் பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,” போர்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 செப்டம்பரில் வெளியேறுவதாக அறிவித்த பிறகு, அரசாங்கத்தின் PLI திட்டத்தில் பங்கேற்க போர்டு விண்ணப்பித்தது, ஆனால் பின்னர் உலகளாவிய சந்தைகளுக்கு இந்தியாவில் EVகளை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டது. உண்மையில், போர்டின் ரீ-என்ட்ரி பற்றிய பேச்சு அது வெளியேறியதிலிருந்து இருந்து வருகிறது.

மேலும் படிக்க: 91 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை.. ஒரு பந்து கூட வீசாமல் முடிந்த டெஸ்ட் போட்டி!

கடந்த ஆண்டு, சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, ஃபோர்டு எதிர்பாராதவிதமாக அதன் தமிழ்நாடு ஆலையை (குஜராத் ஆலையை டாடாவுக்கு விற்றது) விற்கும் திட்டத்தை கைவிட்டது. இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து ஊகங்கள் இருந்ததிலிருந்து, குறிப்பாக இந்திய சந்தை விரைவாக முதிர்ச்சியடைந்து, வெளிநாட்டு பிராண்டுகளான Kia மற்றும் MG மோட்டார்ஸ் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் ஐரோப்பாவின் சந்தைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாததால், இந்தியா வளர்ச்சிக்கான மையமாக மாறுகிறது. “இந்தியாவிற்கு வெளியே இருப்பது சரியல்ல என்று உணர்கிறேன், குறிப்பாக இந்த பிராண்ட் இன்னும் சாத்தியமான வாங்குபவர்களுக்கு நன்கு தெரியும்,” என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் புதிய EV கொள்கை Ford நிறுவனத்திற்கு ஒரு பெரிய உந்துதலாக இருக்க என கருதப்படுகிறது.

Latest News