5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Post Office scheme: ரூ.5 லட்சம் முதலீடு, ரூ.10 லட்சம் ரிட்டன்!

Post Office Scheme: இந்திய அஞ்சலகத்தால் இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா. முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம். மேலும், இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட நாள்களுக்குள் ஒருவரின் முதலீடு இரட்டிப்பு நிலையை அடைந்துவிடும்.

Post Office scheme: ரூ.5 லட்சம் முதலீடு, ரூ.10 லட்சம் ரிட்டன்!
கிஷான் விகாஸ் பத்ரா
intern
Tamil TV9 | Published: 08 Jun 2024 22:08 PM

கிஷான் விகாஸ் பத்ரா: பொதுவாக ஒவ்வொரு முதலீட்டாளரும் முதலீடு செய்தவுடன் தனது பணத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறார். இதனால் அவர்கள் சிறந்த திட்டத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த செயல்பாட்டில் நீங்கள் பணத்தை இழக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதன்மூலம், உங்களின் பணத்தை இரட்டிப்பாக்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்பையும் உறுதிசெய்யும் இதுபோன்ற பல திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, உங்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை. மேலும், இதுபோன்ற பல திட்டங்கள் அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா. முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் தற்போது 7.5% வீதத்தில் ஆண்டு வட்டியை வழங்குகிறது.

கிஷான் விகாஸ் பத்ரா என்றால் என்ன?

கிசான் விகாஸ் பத்ரா என்பது இந்திய அரசால் நடத்தப்படும் மொத்த முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம். கிசான் விகாஸ் பத்ரா யோஜனா நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் பெரிய வங்கிகளில் முதலீடு செய்யக் கிடைக்கிறது. இந்தத் திட்டம் விவசாயிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட கால அடிப்படையில் தங்கள் பணத்தை சேமிக்க முடியும். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1000. அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. எனினும் வட்டி வருவாய்க்கு வரி பிடித்தம் உண்டு.

முதலீடு இரட்டிப்பு

தற்போதைய வட்டி விகிதத்தின்படி, இந்தத் திட்டத்தில் 5 லட்சங்களை முதலீடு செய்தால், அடுத்த 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் 10 லட்சம் ரூபாய் திரும்பப் பெறுவீர்கள். அதாவது, வட்டியில் இருந்து நேரடியாக 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பீர்கள். இந்தத் திட்டத்தில் மொத்தமாக 4 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களில் 8 லட்சம் திரும்பப் பெறுவீர்கள். ஏனென்றால், இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டியின் பலனையும் நீங்கள் பெறுவீர்கள். அதாவது, நீங்கள் வட்டிக்கும் வட்டி பெறுவீர்கள்.

முதலீடு செய்வது எப்படி?

ரூ.1000 முதல் கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். தொடர்ந்து, 100 ரூபாய் மடங்குகளில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் ஒருவர் தொடங்கலாம்.
மேலும், ஒற்றைக் கணக்கு மற்றும் 3 பெரியவர்கள் சேர்ந்து கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். இதில் நாமினி வசதியும் உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கே.வி.பி கணக்கைத் திறக்கலாம். மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபர் சார்பாக பாதுகாவலர்கள் (கார்டியன்) கணக்கைத் திறக்கலாம்.

பி.பி.எஃப்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு விருப்பமாகும், இது கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தையும் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வருமானத்தையும் வழங்குகிறது. சம்பாதித்த வட்டி மற்றும் வருமானம் வருமான வரியின் கீழ் வரி விதிக்கப்படாது. இந்தத் திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ரூ.500 முதல் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனரா, ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ: எஃப்.டி-க்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

Latest News