Gold Price Today: தங்கம் விலை குறைந்ததா? இன்று நகை வாங்கலாமா? நிலவரம் இதுதான்!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை அதிகரித்தது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 19 அதிகரித்து ரூ.6,685க்கும், சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை: ஜூலை மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை விலைமாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 19 அதிகரித்து ரூ.6,685க்கும், சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 1-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரனுக்கு ரூ.53,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை மாற்றிமின்றி ரூ.53,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை விலை மாற்றமின்றி ரூ.6,685க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,240 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,155ஆக உள்ளது.
Also Read: ஜூலை மாதத்தில் இந்த நாள்கள் வங்கிகள் இயங்காது: தேதியை செக் பண்ணுங்க!
வெள்ளி விலை: அதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.94.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.94,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் ஏன் முக்கியம்?
இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ரூ.3 லட்சம் டூ ரூ.5 லட்சம்.. வருமான வரி வரம்பு உயர்கிறதா?