Gold Price Today: சர்ரென சரிந்த தங்கம் விலை… குஷியில் நகைப்பிரியர்கள்! - Tamil News | | TV9 Tamil

Gold Price Today: சர்ரென சரிந்த தங்கம் விலை… குஷியில் நகைப்பிரியர்கள்!

Updated On: 

30 May 2024 10:41 AM

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை: தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gold Price Today: சர்ரென சரிந்த தங்கம் விலை... குஷியில் நகைப்பிரியர்கள்!

தங்கம் விலை

Follow Us On

தங்கம் விலை: 2024ஆம் ஆண்டில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. எனவே, மே மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ.6,740க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இந்த விலை குறையுமா என எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,  சரவனுக்கு ரூ.360 குறைந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 45 குறைந்து ரூ.6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,600 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,200ஆக உள்ளது.

Also Read: 10 ஆண்டுகளில் 27 சதவீதம் வரை ரிட்டன்: பெஸ்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

வெள்ளி விலை:

அதேபோல, வெள்ளி கிராமுக்கு 1.20 காசுகள் குறைந்து ரூ.101.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.101,000 விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் ஏன் முக்கியம்?

இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன.

ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது.

தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆதார் கார்டு டூ ஓட்டுநர் உரிமம் வரை.. ஜூன் 1 முதல் புது ரூல்ஸ்.. நோட் பண்ணிக்கோங்க!

 

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version