Aadhaar : ஆதார் முதல் ரேஷன் அட்டை வரை.. கடைசி தேதி இதுதான்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Aadhaar and Ration card Correction | தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய அடையாள ஆவணங்களில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் முடிய உள்ளது. அதன்படி ரேஷன் அட்டை தொடங்கி பிறப்பு சான்றிதழ் வரை பல முக்கியமான ஆவணங்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புதிய அட்டை வாங்குவதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடையாள அட்டைகள் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அடையாள சான்று உள்ளது. தனி நபர் அடையாள சான்றாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை ஆகியவை உள்ளன. அதுமட்டுமன்றி பான் கார்டு, பிறப்பு சான்றிதழ் என பல்வேறு அடையாள சான்றிதழ்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய அடையாள ஆவணங்களில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் முடிய உள்ளது. அதன்படி ரேஷன் அட்டை தொடங்கி பிறப்பு சான்றிதழ் வரை பல முக்கியமான ஆவணங்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புதிய அட்டை வாங்குவதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டு
தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, புதிதாக சுமார் 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணிகள் திவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை கடைசி தேதி
தனிநபர் அடையாள அட்டையான ஆதாரில் விவரங்களை திருத்த கால அவகாசம் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி வரை விவரங்களைம் திருத்தம் செய்து கொள்ளலாம். ஒருவேலை கடந்த 10 ஆண்டுகளில் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம் தான் அதற்கான கடைசி வாய்ப்பாகும்.
இதையும் படிங்க : Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இதுதான்.. அபராதம் மற்றும் கட்டணம் குறித்த முழு தகவல் இதோ!
முன்னதாக 14 டிசம்பர் 2023 இலவசமாக திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அவகாசம் 14 மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு சான்றிதழ் கடைசி தேதி
குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்பாடாதவர்களுக்காக, தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில், கால அவகாசம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : PF Balance : UAN இல்லாமல் பிஎஃப் பேலன்ஸ் செக் பண்ணலாம்.. இந்த சிம்பிள் டிப்ஸ்களை தெரிஞிசிக்கோங்க!