Post Office FD : ரூ.5 லட்சம் செலுத்தி ரூ.10,00,000 பெறலாம்.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ!
Best return post office FD | அரசின் இந்த அஞ்சலக FD திட்டங்கள் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகள் என கிடைக்கின்றன. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே பாதுகாப்பான மற்றும் சிறந்த வட்டியுடன் கூடிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த அஞ்சல FD திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
அஞ்சலக FD திட்டம் : எதிர்காலத்தை குறித்த பயம் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தான் அனைவரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அடிக்கடி உயரும் விலை வாசியின் காரணமாக, பாதுகாப்பான பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு பொதுமக்கள் சேமிக்க சிறந்த திட்டம் தான் FD எனப்படும் நிலையான முதலீட்டு திட்டம். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் இருப்பது போல் அஞ்சலகங்களிலும் FD திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அஞ்சல சேமிப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுவதால், அதில் அதிக நம்பகத்தன்மை உள்ளதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
அரசின் இந்த அஞ்சலக FD திட்டங்கள் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகள் என கிடைக்கின்றன. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே பாதுகாப்பான மற்றும் சிறந்த வட்டியுடன் கூடிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த அஞ்சல FD திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்கள் எஃப்.டி.. 8.80% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
டைம் டெபாடசிட் வட்டி விகிதம்
- ஒரு வருடத்திற்கான அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.
- இரண்டு வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.0% வரை வட்டி வழங்கப்படுகிறது.
- மூன்று வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
- இதேபோல ஐந்து வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.10 லட்சம் பெறலாம் – எப்படி?
இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். பிறகு அந்த முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்யும்போது, 5 ஆண்டுகளில் ரூ.2,24,974 உங்களுக்கு வட்டியாக கிடைக்கும். எனவே 5 ஆண்டுகளில் உங்களுக்கு மொத்தமாக ரூ. 7,24,974 கிடைக்கும்.
இதையும் படிங்க : Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இதுதான்.. அபராதம் மற்றும் கட்டணம் குறித்த முழு தகவல் இதோ!
இப்போது இந்த ரூ.7,24,974 மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்யும்போது, உங்களுக்கு வட்டியாக ரூ.3,23,201 கிடைக்கும். ஆக, ஏற்கனவே முதலீடு செய்த ரூ.7,24,974 உடன் 5 ஆண்டுகளுக்கான வட்டி ரூ.3,23,201 சேர்ந்து உங்களுக்கு 10 ஆண்டுகளில் ரூ.10,51,175 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
((Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.))