Kisan Vikas Patra : 7.5% வட்டி.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி? - Tamil News | if you invest in Kisan Vikas Patra scheme you will get double benefit | TV9 Tamil

Kisan Vikas Patra : 7.5% வட்டி.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

Published: 

13 Jul 2024 17:00 PM

KVP Scheme | கிஷான் விகாஸ் பத்ரா முதலீடு திட்டம் ஆரம்பத்தில் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து இந்திய குடிமக்களும் முதலீடு செய்யும் வகையில் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது 7.5% வரை வட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Kisan Vikas Patra : 7.5% வட்டி.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

மாதிரி புகைப்படம்

Follow Us On

கிஷான் விகாஸ் பத்ரா : வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் போதிய பொருளாதாரம் இல்லையென்றால் கடும் நிதி நெருக்கடியில் சிக்க வேண்டிய சூழல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொருளாதாரத்தை பாதுகாக்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். தனியார் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் நம்பகத் தன்மை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அரசின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார் போல அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் கிஷான் விகாஸ் பத்ரா முதலீடு திட்டம் ஆகும்.

நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்கும் திட்டம்

நீண்ட கால முதலீடு மற்றும் உத்தரவாதமான தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சிறு சேமிப்பின் மூலம் நல்ல வருவாயை கொடுக்கும் சிறந்த திட்டங்களாக உள்ளன. அதில் ஒன்று தான் கிஷான் விகாஸ் பத்ரா முதலீடு திட்டம். நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 1988 ஆம் ஆண்டு இந்த திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7.5% வட்டி வழங்கப்படுகிறது

கிஷான் விகாஸ் பத்ரா முதலீடு திட்டம் ஆரம்பத்தில் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து இந்திய குடிமக்களும் முதலீடு செய்யும் வகையில் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது 7.5% வரை வட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இரட்டிப்பு லாபம் தரும் திட்டம்

கிஷான் விகாஸ் பத்ரா முதலீடு திட்டம் உங்கள் முதலீட்டை வெறும் 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாக்குவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. அதன் படி இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், 110 மாதங்களுக்கு பிறகு அது முதிர்ச்சியாகி உங்களுக்கு ரூ.10 லட்சம் வருமானமாக கிடைக்கும்.

இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம் என்றால் என்ன?.. வட்டி மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

அதிக பட்ச வரம்பு இல்லை

இந்த திட்டத்தில் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் அதிக பட்ச வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.50,000-க்கு மேல் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பான் கார்டை ஆதாரமாக வழங்க வேண்டும். இதுவே ரூ.10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்ய வேண்டும்  என்றால் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது.

(Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.)

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version