5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Meesho : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ.. 9 நாட்கள் விடுமுறை அளித்து அசத்தல்.. ஏன் தெரியுமா?

Holiday | அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிரபல இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றுதான் மீஷோ. இந்த இ காமர்ஸ் தளத்திற்கு வாடிக்கையாளர்கள் ஏராலம். காரணம், மற்ற தளங்களை விடவும் மீஷோவில் மிக குறைவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யபப்டுகின்றன.

Meesho : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ.. 9 நாட்கள் விடுமுறை அளித்து அசத்தல்.. ஏன் தெரியுமா?
மீஷோ
vinalin
Vinalin Sweety | Published: 16 Oct 2024 14:08 PM

அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிப்பதுடன், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பரிசுப்பொருள், போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு 2-3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கவும் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரபல இ காமர்ஸ் நிறுவனமான மீஷோ தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பரிசு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் மீஷோ

அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிரபல இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றுதான் மீஷோ. இந்த இ காமர்ஸ் தளத்திற்கு வாடிக்கையாளர்கள் ஏராலம். காரணம், மற்ற தளங்களை விடவும் மீஷோவில் மிக குறைவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யபப்டுகின்றன. குறைவான விலையில் தரமான பொருட்களை வழங்கி வருவதால், நாளுக்கு நாள் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய செய்தி.. பிதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

தீபாவளி விற்பனையில் அதிரடி காட்டிய மீஷோ

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மக்கள் தீபாவளி ஷாப்பிங்கை தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பெரிய இ காமர்ஸ் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளுடன் தீபாவளி விற்பனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மீஷோவும் தீபாவளி விற்பனை களத்தில் இறங்கியுள்ளது. பொதுவாகவே மீஷோவுக்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், தீபாவளி விற்பனையை முன்னிட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் மீஷோவில் உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். திட்டமிட்டபடியே தீபாளி விற்பனை அமோகமாக நடைபெற்ற நிலையில், மீஷோ நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த மகிழ்ச்சியை ஊழியர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் அட்டகாசமாக அறிவிப்பு ஒன்றை மீஷோ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ

தீபாவளி பண்டிகை விற்பனை அமோகமாக நடந்த நிலையில், ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 9 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மீஷோவின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். அதன்படி, வரும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த 9 நாட்களும் ஊழியர்கள் மெயில், மீட்டிங், லேப்டாப் என எந்தவித தொந்தரவும் இன்றி குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவும் மீஷோ கூறியுள்ளது.

இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

உற்சாகத்தில் மீஷோ ஊழியர்கள்

மீஷோவின் இந்த அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். மேலும் இது குறித்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள ஊழியர்கள், எங்கள் நிறுவனம் எங்களுக்கு “Reset and Recharge” நேரம் வழங்கியுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை மெயில், மீட்டிங், லேப்டாப் என எந்தவித தொந்தரவும் இன்றி நேரத்தை செலவழிக்க 9 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளனர்.

Latest News