5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

Saving Scheme | பொதுமக்களுக்கு சேமிப்பின் போதே லாபத்தை வழங்ககூடிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் தனிநபர் சுமார் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக் கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 22 Oct 2024 16:23 PM

சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது எதிர்பாத நிதி பற்றாக்குறைகளை மற்றும் வருங்கால திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பெரும்பாலான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், அந்த திட்டத்தின் முதிவு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் சேமிப்புக்கு சேமிப்பும், மாத வருமானமும் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு மாத வருமானம் கிடைக்கும்.

இதையும் படிங்க : India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!

சேமிப்பின் போதே வருமானம் வழங்கும் திட்டம்

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். மற்ற திட்டங்களில் முதலீடு செய்தால், அதன் முதிர்வு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அஞ்சலக மாத வருமான திட்டத்தில் அந்த அவசியம் இல்லை. திட்டத்தின் முதலீட்டின் போதே வருமானம் பெற முடியும். இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் அந்த திட்டத்தின் வட்டியை முதிர்வு காலம் வரை பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தின் முடிவில் முதலீடு செய்த பணமும் முதலீட்டாளரிடம் ஒப்படைக்கப்படும்.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

அஞ்சலக மாத வருமான திட்டம் – சிறப்பு அம்சங்கள்!

பொதுமக்களுக்கு சேமிப்பின் போதே லாபத்தை வழங்ககூடிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் தனிநபர் சுமார் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக் கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும், திட்டம் முடியும்வரை காத்திருக்காமல் மாதம் மாதம் வருமானம் பெறலாம். ஒருவேளை 5 ஆண்டுகளில் திட்டம் முடிவடைந்துவிட்டால் அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளும் அம்சமும் இதில் உள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய ஆக்சிஸ் வங்கி!

அதிக லாபம் வழங்கும் அஞ்சல மாத வருமான திட்டம்

தற்போது இந்த அஞ்சல மாத வருமான திட்டத்திற்கு சுமார் 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இது தனிநபர் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு இரண்டிற்கும் பொருந்தும். இந்த திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்த தொகையை முதலீடு செய்யும் 5 ஆண்டுகளுக்கும் உங்களுக்கு 7.4% வட்டி வழங்கப்படும். அதன்படி, ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஒரு மாதத்திற்கு ரூ.5,550 வருமானமாக கிடைக்கும். இதையே நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை பெற்றுக்கொள்ள விரும்பினால், உங்களுக்கு ரூ.66,600 வருமானமாக கிடைக்கும். அதன்படி, முதலீடு செய்த 5 ஆண்டுகளில் அசல் தொகை ரூ.5 லட்சம் போக ரூ.3.33 லட்சம் வட்டியாக கிடைக்கும். இதுவே முதலீட்டுடன் சேர்த்தால் உங்களுக்கு ரூ.8.33 லட்சம் மொத்தமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Share Market : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News