5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாதம் ரூ. 5,000க்கு மேல் வட்டி… பணத்தை சேமிக்க போஸ்ட் ஆபிஸ் வழங்கும் பக்காவான முதலீட்டு திட்டம்!

அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற பல்வேறு முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களை தபால் நிலையங்கள் தற்போது வழங்குகின்றன. அதிக முக்கியமான திட்டங்களுள் ஒன்றுதான். 'தபால் நிலையத்தின் மாத வருமான திட்டம்'. இந்த திட்டத்தில் கிடைக்கக் கூடிய வட்டியே மக்களை இதை நோக்கி ஈர்க்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், அதே நேரத்தில் ஒரு சீரான முதலீடாகவும் செயல்படுகிறது.

மாதம் ரூ. 5,000க்கு மேல் வட்டி… பணத்தை சேமிக்க போஸ்ட் ஆபிஸ் வழங்கும் பக்காவான முதலீட்டு திட்டம்!
சேமிப்பு திட்டம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 May 2024 13:07 PM

ஒரு பெரிய தொகையை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து அதில் இருந்து மாத வருமானமும் பெற வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு, ஏற்ற தபால் நிலையத்தின் சிறப்பான முதலீட்டுத் திட்டம் குறித்து இதில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். நமக்கு வரும் வருமானத்தில் ஒரு சின்ன பகுதியையாவது சேமிக்க வேண்டும் என்ற மனநிலை சமீப ஆண்டுகளில் மக்களிடம் காணப்படுகிறது. சேமிப்பு என்பதை விட ரிஸ்க் இல்லாத முதலீட்டில் பணம் போட மக்கள் தற்போது தயாராகிவிட்டனர். எதிர்காலத் தேவை, நீண்ட கால திட்டமிடல் உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம்.

நம்பகமான முதலீடு!

தற்போது இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இருந்தாலும், மத்திய நடுத்தர வர்க்கத்தினர் எவ்விதமான ரிஸ்கும் இல்லாமல், மிகுந்த பாதுகாப்பான முதலீட்டையே எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கான சிறந்த இடம் என்றால் அது தபால் நிலையம்தான். இன்றைய காலகட்டங்களில் தபால் நிலையங்களே மக்களின் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.

அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற பல்வேறு முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களை தபால் நிலையங்கள் தற்போது வழங்குகின்றன. அதிக முக்கியமான திட்டங்களுள் ஒன்றுதான். ‘தபால் நிலையத்தின் மாத வருமான திட்டம்’. இந்த திட்டத்தில் கிடைக்கக் கூடிய வட்டியே மக்களை இதை நோக்கி ஈர்க்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், அதே நேரத்தில் ஒரு சீரான முதலீடாகவும் செயல்படுகிறது.

Also Read: 9 காரட் தங்கம், ஹால்மார்க் முத்திரை: கிராம் எவ்வளவு தெரியுமா?

வட்டி எவ்வளவு தெரியுமா?

இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஒரு தனிநபர் கணக்கில் 9 லட்ச ரூபாயும், ஜாயிண்ட் அக்கவுண்டில் 15 லட்ச ரூபாயும் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.4% ஆக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் என்பது 5 ஆண்டுகள் ஆகும்.

அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை நிலையான தொகையை முதலீடு செய்தால், மாதாமாதம் உங்களுக்கு இதில் இருந்து தனியாக வருமானம் வரும். உதாரணத்திற்கு நீங்கள் இப்போது இந்த திட்டத்தில் சுமார் 9 லட்சத்தை முதலீடு செய்தால், மாதாமாதம் 5 ஆயிரத்து 550 ரூபாய் வட்டியாக கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு பின் நீங்கள் உங்கள் முதலீடான 9 லட்சத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

பின்வாங்க நினைத்தால்…

ஒருவேளை முதலீடு செய்த பின்னர், இதில் இருந்து பின்வாங்க வேண்டும் என்றாலும் அதை செய்யலாம். முதலீடு செய்த ஓராண்டுக்குள் இந்த திட்டத்தை கைவிடுகிறீர்கள் என்றால் தொகையில் எவ்வித பிடித்தமும் இருக்காது. அதே முதலீடு செய்து இரண்டாம், மூன்றாம் ஆண்டுக்குள் திட்டத்தை கைவிட்டால், 2 சதவீதம் உங்கள் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். முதலீடு செய்த மூன்றாண்டுகளுக்கு பின்னர் திட்டம் முதிர்ச்சியடைவதற்கு முன் தொகையை பெற நினைத்தால், அதில் 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

ஒருவர் ஒரே கணக்கில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை, நீங்கள் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்புக்குள் மட்டுமே உங்களால் முதலீடு செய்ய இயலும். தற்போது தனிநபர் கணக்கில் ஒருவரால் 9 லட்ச ரூபாய் வரை மட்டுமே முதலீடு செய்ய இயலும்.

கட்டுப்பாடுகளும் உண்டு…

அதுவும் ஜாயிண்ட் அக்கவுண்டில் அதிகபட்சம் 15 லட்ச ரூபாய் முதலீடு செய்யலாம் என்றாலும், அந்த கணக்கின் அனைத்து பயனர்களும் சமமான அளவில்தான் முதலீடு செய்ய வேண்டும். இதுபோக, உங்களின் குழந்தைகளின் பெயர்களிலோ அல்லது 18 வயதிற்கு குறைவான சிறுவர்களின் பெயர்களிலோ நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கென தனி விதிமுறைகள் உள்ளன.

யாருக்கு உதவும்…?

கையில் ஒரு பெரிய தொகையை வைத்துக்கொண்டு அதை பாதுகாப்பான இடத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயன்தரும். இதில் இருந்து மாதாமாதம் வரும் வட்டியை நீங்கள் ஒரு வருமானமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அரசின் தபால் நிலையங்களில் இந்த திட்டம் வழங்கப்படுவதால் நிதி பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.

Also Read: கிஷான் விகாஷ் பத்ரா: ரூ.1,000 போட்டால் ரூ.2 ஆயிரம் ரிட்டன்.. முழு விவரம்

Latest News