NEET UG Results: வெளியானது இளநிலை நீட் தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நகரங்கள், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மையங்கள் வாரியாக நீட் முடிவுகளை இன்று பகலுக்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நகரங்கள், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மையங்கள் வாரியாக நீட் முடிவுகளை இன்று பகலுக்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் nta.ac.in/NEET என்ற இணையதளத்தை க்ளிக் செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம். முன்னதாக, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக பீகாரில் வினாத்தாள் கசிந்நதாக சில்ர் கைதாகினர்.
அதேபோல, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது வழக்கத்திற்கு மாறாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றதும் பெரும் சந்தேகத்தை கிளப்பியது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால், அதிருப்தி அடைந்த மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மறுதேர்வு கோரியும் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
Also Read: கேட் தேர்வு எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!
வழக்கின் விவரம்:
இதுதொடர்பான ஏராளமான மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பல கட்ட விசாரணைகளை நடத்தியது. கடந்த 18ஆம் தேதி முழு தேர்வுமே தனது புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் அல்லது மறுதேர்வு நடத்தக் கோரும் மனுதாரர்கள் வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த நீட் தேர்வையும் பாதித்தது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
நீட் தேர்வு முடிவுகளை மையம் மற்றும் நகரங்கள் வாரியாக ஜூலை 20ஆம் தேதி பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு முடிவுகளை வெளியிடும்போது தேர்வர்களின் அடையாளங்களை மறைத்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இளநிலை நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.
Also Read: க்யூட் யுஜி மறுதேர்வு தேதி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!