”என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல” – ஆர்த்தி ரவி வேதனை - Tamil News | Aarti Ravi Responds to allegations on matter of divorce with Jayam Ravi | TV9 Tamil

”என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல” – ஆர்த்தி ரவி வேதனை

Published: 

01 Oct 2024 11:04 AM

ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், திருமணப் பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்தமுடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறியிருந்தார். இந்த இருவரின் அறிக்கையை அடுத்து இணையத்தில் ஜெயம் ரவி குறித்தும் அவரை சுற்றி உள்ளவர்கள் குறித்தும் பல வதந்திகள் பரவத் தொடங்கியது. மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது.

”என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல” - ஆர்த்தி ரவி வேதனை

ஆர்த்தி ரவி

Follow Us On

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் ”என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல” என ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 வருட திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயம் ரவி தனது விவாகரத்து குறித்து அறிவித்த பிறகு தொடர்ந்து இணையத்தில் பல்வேறு கருத்துகள் வைரலாகி வருகின்றது. தொடந்து ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் தங்கள் தரப்பு நியாயங்களை வெளிய்படுத்தி வருகின்றனர்.

மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி பிரிந்து வாழ்ந்ததாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இது குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நீண்ட கால யோசனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்று நடிகர் ஜெயம் ரவி கடந்த மாதம் 9-ம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Also read… ஆப்ராம் என்று மகனுக்கு பெயர் வைத்தது ஏன்? – நடிகர் ஷாருக்கான் விளக்கம்

இதற்கு பதிலளிக்கும்படி பேசிய ஆர்த்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளியானது. இதையடுத்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், திருமணப் பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்தமுடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறியிருந்தார். இந்த இருவரின் அறிக்கையை அடுத்து இணையத்தில் ஜெயம் ரவி குறித்தும் அவரை சுற்றி உள்ளவர்கள் குறித்தும் பல வதந்திகள் பரவத் தொடங்கியது. மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் ரவி விளக்கம் அளித்தார்.

Also read… கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்

இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த கிசு கிசுவும் வராமல் இருந்தவன் நான்.என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசுவது தவறானது.அந்தப் பெண், ஆதரவற்ற பெண். அவர்பலருக்கு உதவி வருகிறார். அவரும் நானும் இணைந்து ஹீலிங் செண்டர் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இன்னொரு பெண்ணை இதில் தொடர்பு படுத்துவது தேவையற்றது. இது தொடர்பாக அதிகம் பேச வேண்டாம் என நினைக்கிறேன். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது. அந்த அறிக்கையில், “என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பரப்பப்படும் அவதூறுகளை பார்த்து நான் அமைதியாக இருப்பது குற்றவுணர்வினால் இல்லை. இந்த விஷயத்தின் முடிந்த அளவிற்கு என்னுடைய தன்மானத்தை நான் பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன். நான் கண்ணியமாக இருப்பதால், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்குத்தான் இந்த அறிக்கை. சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version