5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கே.ஜி.எஃப் இயக்குநருடன் இணைந்த அஜித்? தீயாய் பரவும் செய்தி

நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் அஜித் குமார் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் கேஜிஎஃப் யூனிவர்ஸிலும் நடிகர் அஜித் இணையப் போவதாகவும் பரபரப்பான தகவல்கள் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கே.ஜி.எஃப் இயக்குநருடன் இணைந்த அஜித்? தீயாய் பரவும் செய்தி
அஜித் மற்றும் பிரஷாந்த் நீல்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Sep 2024 09:15 AM

பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றது. இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்த தென்னிந்திய திரைப்படங்களுள் ஒன்று, கே.ஜி.எஃப். 2018-ம் ஆண்டில் இப்படத்தின் முதல் பாகமான KGF-Chapter 1 வெளியானது. இதில், யாஷ் நாயகனாக நடித்திருந்தார். கடத்தல் மன்னனான ராக்கியின் பலத்தையும், அவன் வாழ்ந்த விதத்தை விளக்குவது போலவும் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தையும் பிரசாந்த நீல்தான் இயக்கியிருந்தார். அடுத்து சலார் 2 படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அடுத்து அஜித்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். இந்த படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் சமீபத்தில் வெளியானது. ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது. அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் கேஜிஎஃப் யூனிவர்ஸிலும் நடிகர் அஜித் இணையப் போவதாகவும் பரபரப்பான தகவல்கள் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also read… Kottukkaali Movie : சூரியின் ’கொட்டுக்காளி’ படம் ரிலீஸ் தேதி.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

அதன்படி இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் இணைந்து அஜித் இரண்டு படங்கள் பணிபுரிய உள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Latest News