கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் அதிரடியாக கைது – நடந்தது என்ன?
Kannada Actor Darshan: கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசுவாமி. தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்த நிலையில், கொல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறியுள்ளனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட நடிகர் தர்ஷன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவை மைசூரில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர். இந்நிலையில் காமாக்ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி ரேணுகா சுவாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காமாக்ஷிபாலயா போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக போலீஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.
நடிகர் தர்ஷன் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரும் ஆவார். கன்னட சினிமாவின் முன்னணி சமகால நடிகர்களில் ஒருவரான, தர்ஷன் 2006 இல் தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். கன்னட சினிமாவில் ‘அனதரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா’ திரைப்படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசுவாமி. தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்த நிலையில், கொல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறியுள்ளனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட நடிகர் தர்ஷன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Also read… திண்டுக்கல்லில் பேக்கரிக்குள் புகுந்த அரசுப் பேருந்து… அலறியடித்து ஓடிய பெண்கள்
இதனைத் தொடர்ந்து, காமாக்ஷிபாலயா போலீசார் நடிகர் தர்ஷனை மைசூருவில் இன்று (ஜூன் 11) கைது செய்தனர். பின்னர் தர்ஷனுடன் சேர்த்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் போலீசார் பெங்களூரு அழைத்து வந்தனர். இது தொடர்பாக காவல்துறை டிசிபி கிரீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனை கைது செய்துள்ளோம். காமக்ஷிபாளையா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.