“உங்களின் மோசமான கருத்துக்கள், புண்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி” – நடிகர் தர்ஷனின் மகன்! - Tamil News | Actor Darshans son calls out trolls in social media Thank you for not considering Im 15 | TV9 Tamil

“உங்களின் மோசமான கருத்துக்கள், புண்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி” – நடிகர் தர்ஷனின் மகன்!

Published: 

16 Jun 2024 12:43 PM

உங்களின் மோசமான கருத்துக்கள், புண்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி - நடிகர் தர்ஷனின் மகன்!

தர்ஷனின் மகன் வினிஷ் தர்ஷன்

Follow Us On

“உங்களின் மோசமான கருத்துக்கள் மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி” என  கைதான கன்னட நடிகர் தர்ஷனின் மகன் வினிஷ் தர்ஷன் உருக்கமாக பதிவு ஒன்றை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவை மைசூரில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர். இந்நிலையில் காமாக்‌ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி ரேணுகா சுவாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காமாக்‌ஷிபாலயா போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக போலீஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.

நடிகர் தர்ஷன்  தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரும் ஆவார். கன்னட சினிமாவின் முன்னணி சமகால நடிகர்களில் ஒருவரான, தர்ஷன் 2006 இல் தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். கன்னட சினிமாவில் ‘அனதரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா’ திரைப்படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசுவாமி. தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்த நிலையில், கொல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறியுள்ளனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட நடிகர் தர்ஷன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காமாக்‌ஷிபாலயா போலீசார் நடிகர் தர்ஷனை மைசூருவில் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்தனர்.

Also read… பண மோசடி வழக்கில் ’மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகரிடம் விசாரணை!

இந்நிலையில், நடிகர் தர்ஷனின் மகன் வேதனைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “15 வயதான என்னுடைய உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் எனது தந்தையைப் பற்றிய உங்களின் மோசமான கருத்துக்கள் மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி. என் அம்மா அப்பா ஆதரவு தேவைப்படும் இந்த கடினமான நேரத்திலும், என்னை திட்டும் உங்கள் யாரையும் மாற்ற முடியாது” என பதிவிட்டுள்ளார்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version