Raayan Review : ‘ராயன்’ விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்லும் டிவிட்டர் ரிவியூ! - Tamil News | Actor Dhanush 50th Movie Raayan Twitter review | TV9 Tamil

Raayan Review : ‘ராயன்’ விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்லும் டிவிட்டர் ரிவியூ!

Published: 

26 Jul 2024 08:32 AM

Raayan Twitter Review :ராயன் படம் வெளியாகும் இன்று ஒரு நாள் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிகாட்சியை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. இன்று படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Raayan Review : ராயன் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்லும் டிவிட்டர் ரிவியூ!

ராயன்

Follow Us On

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ‘ராயன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திரான கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் தனுஷ் ரசிகர்களை அதனை கொண்டாடி வருகின்றனர்.

2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கியுள்ளார் தனுஷ்.

ராயன் பட ட்ரெய்லரில்,  ‘காட்டுலையே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?’ என செல்வராகவன் கேட்க, ‘சிங்கம் தான்’ என்கிறார் குட்டி தனுஷ். ‘ஆபத்தான மிருகம் ஓநாய். ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாய அடிச்சிடும். ஆனா ஓநாய் தந்திரவாதி” என்ற வசனம் கவனம் பெறுகிறது. வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா அவன் ஆம்பளனா ஒத்தைக்கு ஒத்தை வர சொல்லுடா என்று சொல்ல,  பேய் மாறி வருவான்… எறங்கி செய்வான் என்று செல்வராகவன் பதில் கூறுவது மாஸாக இருந்தது. இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்தது.

Also read… 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் இந்த குழந்தை… நீங்க கண்டுபிடிச்சீங்களா?

இந்த நிலையில், ராயன் படம் வெளியாகும் இன்று ஒரு நாள் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிகாட்சியை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.

இன்று படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது என்ன என்று தற்போது பார்க்கலாம்…

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version