5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: இவங்கதான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் – தனுஷ் சொன்னது யார் தெரியுமா?

Actor Dhanush: தனுஷ் கடைசியாக ராயன் படத்தில் நடித்தார். தனது 50ஆவது படமான அதை தானே இயக்கவும் செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி வெளியான நிலையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

Cinema Rewind: இவங்கதான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் – தனுஷ் சொன்னது யார் தெரியுமா?
தனுஷ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2024 22:31 PM

தமிழ் சினிமாவின் எதிர்காலம் இவர்கள் தான் என நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சொன்ன இரண்டு பிரபல நடிகர்கள் யார் என்பது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் கடைக்குட்டி மகனாக பிறந்தவர் நடிகர் தனுஷ். வெங்கடேஷ் பிரபுவாக பிறந்த இவரை நடிகர் தனுஷ் என மாற்றியது இவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் தான். 2002-ம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ படம் மூலம் திரைத்துறைக்கு வந்து தற்போது ஹாலிவுட் வரை சென்றடைந்தது இவரது அயராத உழைப்பைக் காட்டுகிறது. ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானபோது ஒல்லியான நோஞ்சான் உடம்புடன் ஒருவன் ராணுவ உடை அணிந்து கொண்டு ஒட்டு மீசையுடன் வந்து நிற்கிறான் என்று பல கேலிகளுக்கு ஆளான ஒருவர் ஹாலிவுட் வரை பிரபலமானது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமாவில் உருவ கேலியை சந்தித்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் அதிகம் சந்தித்தவர் என்றால் அவர் தனுஷ்தான். துள்ளுவதோ இளமை படத்தில் அவர் அறிமுகமானபோது இவரெல்லாம் ஒரு ஹீரோவா என்று பலரும் அவரது காதுபடவே பேசினார்கள். ஆனால் அந்த வயதிலும் பக்குவத்தோடு அதை கடந்து சென்று திறமையை மட்டும் வளர்த்து இன்று தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

தனது சினிமா வாழ்க்கைக்கு அண்ணன் செல்வராகவன் ஆரம்ப புள்ளி என்றால் இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ’பொல்லாதவன்’ படம் தனுஷின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியது. இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் சண்டைபோட வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார் தனுஷ். அவரை சிக்ஸ் பேக்ஸ் உடன் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்உ புரூஸ் லீ போல இருப்பதாக சிலாகித்தனர். அதனை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வந்த ’ஆடுகளம்’, ’வட சென்னை’, ’அசுரன்’ என வெளியான அனைத்துப் படங்களும் சொல்லி அடித்தது போல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

Also read… கோலிவுட்டின் முன்னணி நடிகை இந்த சிறுமி… யார் தெரியுதா?

தனுஷ் கடைசியாக ராயன் படத்தில் நடித்தார். தனது 50ஆவது படமான அதை தானே இயக்கவும் செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி வெளியான நிலையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. தற்போது வரை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலகளவில் ரூ. 134 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 70 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசுகையில் தமிழ் சினிமாவின் அடுத்த எதிர்காலமாக இந்த இரண்டு நடிகர்களும் இருப்பார்கள் என்று விஜய் சேதுபதி மற்றும் சிவ கார்த்திக்யேன இருவரையும் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே இந்த இரண்டு நடிகர்களும் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாகவே உள்ளனர். இந்த நிலையில் தற்போது தனுஷ் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News