5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jayam Ravi Divorce: காத்திருந்து திருமணம் செய்தும் என்ன பலன்?.. ஜெயம் ரவி விவகாரத்தால் குமுறும் ரசிகர்கள்!

ஜெயம் ரவி தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “அதில் நீண்ட கால யோசனை மற்றும் பலகட்ட பரிசீலனைகளுக்கு பிறகு ஆர்த்தி உடனடியாக எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவு எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. என்னைச் சார்ந்தவர்களின் மனமே கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Jayam Ravi Divorce: காத்திருந்து திருமணம் செய்தும் என்ன பலன்?.. ஜெயம் ரவி விவகாரத்தால் குமுறும் ரசிகர்கள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 09 Sep 2024 13:20 PM

ஜெயம் ரவி: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. தமிழில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான அவர், அப்படத்தின் பெயரால் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறார். அப்பா தயாரிப்பாளர் – எடிட்டர் மோகன், அண்ணன் ராஜா இயக்குநர் என கலையுலக குடும்பத்தை சேர்ந்த ஜெயம் ரவி தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “அதில் நீண்ட கால யோசனை மற்றும் பலகட்ட பரிசீலனைகளுக்கு பிறகு ஆர்த்தி உடனடியாக எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவு எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. என்னைச் சார்ந்தவர்களின் மனமே கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த முடிவை எனது சொந்த முடிவாகும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: Astrology: உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டினால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி திருமணம் செய்துக் கொண்டார். ஆர்த்தி பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளாவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தின் அவரின் மகனாக நடித்திருப்பார். கோலிவுட்டின் மிகவும் பிரபலமான தம்பதிகளாக இவர்கள் வலம் வந்தனர். ஆர்த்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுவார். அடிக்கடி ஜெயம் ரவி, குழந்தைகள் உடனான தனது புகைப்படங்களை பகிர்வார். இப்படியான நிலையில் கடந்த ஓராண்டாகவே ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் பிரியப்போவதாக தகவல் வெளியானது. இன்று அது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Also Read: OnePlus : பச்சை கோடு முதல் மதர்போர்டு பிரச்னை வரை.. நீண்ட விளக்கமளித்த ஒன்பிளஸ் நிறுவனம்!

அதாவது, “ஒரு நேர்காணலில் பேசிய ஆர்த்தியிடம், ஜெயம் ரவியுடனான திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை காட்டி அதன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஜெயம் ரவி என்னுடைய கழுத்தில் தாலி கட்டும் அந்த நாளுக்காக நீண்ட காலம் காத்திருந்தோம். இருவரின் பெற்றோரிடமும் சம்மதம் வாங்கி திருமணம் நடைபெறுவது மிகப்பெரிய செயலாக இருந்தது. நான் திருமணம் ஆகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். பொதுவாக பலர் திருமணத்தின் போது கண்கலங்குவார்கள். ஆனால் எனக்கு அப்படியான எண்ணம் ஏற்பட்டதில்லை” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, “நான் என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் பின்வாங்கி இருக்கிறேன். பிரபலமாக இருப்பதால் எங்கும் போய் இருவரும் ஒன்றாக சாப்பிட முடியாது. எங்களுடைய காதல் வெளியே தெரியாத நேரம் அது. எங்கேயாவது சென்றிருக்கும்போது யாராவது போட்டோ எடுத்தால் வீட்டில் தெரிந்து விடும் என நினைப்போம். அதனால் காரிலேயே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று விட்டு திரும்பி வந்து விடுவோம். அதிகமாக நாங்கள் காரில் தான் நேரம் செலவழிப்போம்” என தெரிவித்திருந்தார்.

Latest News