’வாழு வாழவிடு’… வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ஜெயம் ரவி! - Tamil News | actor jayam ravi explain about divorce issue and singer kenishaa francis | TV9 Tamil

’வாழு வாழவிடு’… வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ஜெயம் ரவி!

Published: 

21 Sep 2024 16:11 PM

தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ரவி. இந்த படத்தில் நடித்த பிறகு ரசிகர்களால் இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். அதன் பிறகு அதுவே இவரது பெயராகவும் சினிமா துரையில் பதிந்துவிட்டது. அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஜெயம் ரவி.

’வாழு வாழவிடு’... வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ஜெயம் ரவி!

ஜெயம் ரவி

Follow Us On

பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம் என்று நடிகர் ஜெயம் ரவி தன்னை குறித்து வெளியான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி பிரிந்து வாழ்ந்ததாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இது குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் ஜெயம் ரவி. இந்த அறிக்கையை தொடர்ந்து இந்த செய்தி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதுகுறித்து தன்னுடன் எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்று அவரது மனைவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பல வதந்திகள் இணையத்தில் பரவிய நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார் ஜெயம் ரவி.

தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ரவி. இந்த படத்தில் நடித்த பிறகு ரசிகர்களால் இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். அதன் பிறகு அதுவே இவரது பெயராகவும் சினிமா துரையில் பதிந்துவிட்டது. அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஜெயம் ரவி. இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 வருட திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், திருமணப் பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்தமுடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறியிருந்தார். இந்த இருவரின் அறிக்கையை அடுத்து இணையத்தில் ஜெயம் ரவி குறித்தும் அவரை சுற்றி உள்ளவர்கள் குறித்தும் பல வதந்திகள் பரவத் தொடங்கியது. மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் ரவி விளக்கம் அளித்திருக்கிறார்.

Also read… Lubber Pandhu Movie Review : ஒவ்வொரு சீனும் சிக்சரு… லப்பர் பந்து விமர்சனம் இதோ!

அதில், விவாகரத்து விஷயம் வருத்தம் அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் சில பிரச்சனைகள் எழுந்தன. சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதை வெளியே சொல்ல முடியாது. என் பசங்களுக்காக நான் எதையும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே பிரியும் முடிவை எடுத்துவிட்டேன். நான் எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று ஆர்த்தி சொல்வது தவறாக தோன்றுகிறது. அதில் லாஜிக்கும் இல்லை. ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், என் மூத்த மகனிடம் இதுகுறித்து பேசியிருக்கிறேன். அவனுக்கு என்ன புரியுமோ அப்படி சொல்லி இருக்கிறேன். அவன், அனைத்து குழந்தைகளையும் போல, இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான். இரண்டு மகன்களும் என்னுடன் தான் இருக்கிறார்கள். என் பெற்றோர் என் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர். என் மகிழ்ச்சிதான் அவர்களுக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.

மேலும், இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த கிசு கிசுவும் வராமல் இருந்தவன் நான்.என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசுவது தவறானது.அந்தப் பெண், ஆதரவற்ற பெண். அவர்பலருக்கு உதவி வருகிறார். அவரும் நானும் இணைந்து ஹீலிங் செண்டர் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இன்னொரு பெண்ணை இதில் தொடர்பு படுத்துவது தேவையற்றது. இது தொடர்பாக அதிகம் பேச வேண்டாம் என நினைக்கிறேன். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும் என்றும் ஜெயம் ரவி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினசரி காலையில் பாதாம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
தென்னிந்தியாவின் மாஸ் நடிகை தான் இந்த சிறுமி
கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்..
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
Exit mobile version