5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தவறு செய்து விட்டேன்… தனது வாழ்க்கை குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் ஜெயம் ரவி

கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 வருட திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தவறு செய்து விட்டேன்… தனது வாழ்க்கை குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Oct 2024 17:54 PM

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நடிகர் ஜெயம் ரவி வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ரவி. இந்த படத்தில் நடித்த பிறகு ரசிகர்களால் இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். அதன் பிறகு அதுவே இவரது பெயராகவும் சினிமா துரையில் பதிந்துவிட்டது. அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகின்றது. இவரது முதல் படமான ஜெயம் படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது.

இவரது நடிப்பில் இதுவரை 32 படங்கள் வெளியாகியுள்ளது. தனது முதல் படத்தில் இருந்தே நடிப்பு, நடனம், சண்டை என அனைத்திலும் தொடர்ந்து பாரட்டுகளைப் பெற்று வருபவராக உள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் பிரதர். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு அதாவது வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 வருட திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், திருமணப் பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்தமுடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறியிருந்தார். இந்த இருவரின் அறிக்கையை அடுத்து இணையத்தில் ஜெயம் ரவி குறித்தும் அவரை சுற்றி உள்ளவர்கள் குறித்தும் பல வதந்திகள் பரவத் தொடங்கியது. மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது.

Also read… சௌபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ்

இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த கிசு கிசுவும் வராமல் இருந்தவன் நான்.என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசுவது தவறானது.அந்தப் பெண், ஆதரவற்ற பெண். அவர்பலருக்கு உதவி வருகிறார். அவரும் நானும் இணைந்து ஹீலிங் செண்டர் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இன்னொரு பெண்ணை இதில் தொடர்பு படுத்துவது தேவையற்றது. இது தொடர்பாக அதிகம் பேச வேண்டாம் என நினைக்கிறேன். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும் என்றும் ஜெயம் ரவி முன்னதாக தெரிவித்திருந்தார்.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் கப்பு முக்கியம்னு பெட்டுக்கு சண்டை… பஞ்சாயத்தை இன்னைக்கு பேசி முடிச்சுடலாம் – விஜய் சேதுபதி

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் பிரதர். இந்தப் படத்தினை எம். ராஜேஷ் இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், நட்ராஜ், விடிவி கணேஷ், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா தம்பி பாசத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் புரோமோசன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ள நிலையில், ஜெயம் ரவி தற்போது அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில், “பிரதர் படம் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் பொருந்தி போகும். இந்த படத்தில் இருக்கும் காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. என் அக்காவுக்கு சிறு வயது முதல் ஒரு பழக்கம் உண்டு அவங்க மனதில் ஏற்பட்ட காயத்தை லெட்டராக எழுதி கொடுப்பார். அதை படிக்கும்போது தான் நான் தவறு செய்து விட்டேன் என்று தோன்றும். என் சினிமா வாழக்கை பற்றி மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு கொண்டு அதன்படி நடப்பேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதை பெரிதாக நான் கண்டு கொள்ளமாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Latest News