5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… என்ன ஆச்சு? சோகத்தில் ரசிகர்கள்

Actor Jiiva met accident: கார் நடு ரோட்டில் உருண்டதால் காரில் அதிகமாக அடிபட்டு இருக்கிறது. ஜீவாவுக்கும் அவருடைய மனைவிக்கும் காயம் ஏற்பட்டிருந்தாலும் ஜீவா அவருடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து வேறு ஒரு காரை வரவழைத்து அந்த காரில் அவரே சேலம் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… என்ன ஆச்சு? சோகத்தில் ரசிகர்கள்
நடிகர் ஜீவா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Sep 2024 17:15 PM

நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளான செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பி. சௌத்ரியின் இளைய மகன் நடிகர் ஜீவா ஒரு திரைத்துறையை சேர்ந்த குடும்பத்தில் இருந்து நடிகராக திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தவர். திரைத்துறையில் பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாக என்ட்ரி கொடுப்பது என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு வழக்கம்தான். ஆனால் அப்படி வந்த அனைவரும் ஜெயித்துவிடுவது கிடையாது. ஆனால் தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் ஜாலியான ஹீரோவாக வலம் வருகிறார் ஜீவா. இந்த நிலையில் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு காரில் சென்ற ஜீவா கனியாமூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, காரின் குறுக்கே திடீரென நபர் ஒருவர் கடந்ததால், நிலை தடுமாறிய ஜீவா அந்த நபரின் மீது மோதல் இருக்க காரை திருப்பும்போது சாலையின் நடுவே உள்ள பேரிகேட்டில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜீவா, ரௌத்திரம், நண்பன், முகமூடி, கோ, டிஷ்யூம், சிவா மனசுல, சக்தி, போக்கிரி ராஜா, கச்சேரி ஆரம்பம், கலகலப்பு மற்றும் பல படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ரவி மரியாவின் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். முதல் படத்தில் அறிமுகமானதைப் போலவே இன்றும் அதே துடிப்புடன் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் நேர்த்தியாக செய்து முடிக்கும் நடிகர் ஜீவா ராம், கற்றது தமிழ் ஆகிய திரைப்படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவிற்கு நிரூபித்து இருந்தார்.

அமீர் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான ‘ராம்’ திரைப்படத்தில் ஜீவாவின் அபாரமான நடிப்பு பாராட்டுகளை குவித்தது. இப்படத்திற்காக  அவருக்கு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்குப் பிறகு இந்த விருதை பெற்ற தமிழ் நடிகர் ஜீவா தான் என்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுள்ள ஜீவாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்த நிலையில் அதன் பிறகு வெளியான படங்களும் சுமாரான வெற்றியையும் தோல்வியையும் மட்டுமே பெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா இன்று தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே ஒருவர் வந்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய ஜீவா அந்த நபரின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த பேரிகார்ட் மீது காட் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Also read… மீண்டும் பெரிய அறுவை சிகிச்சை… தொகுப்பாளினி டிடி-யின் உருக்கமான பதிவு

கார் நடு ரோட்டில் உருண்டதால் காரில் அதிகமாக அடிபட்டு இருக்கிறது. ஜீவாவுக்கும் அவருடைய மனைவிக்கும் காயம் ஏற்பட்டிருந்தாலும் ஜீவா அவருடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து வேறு ஒரு காரை வரவழைத்து அந்த காரில் அவரே சேலம் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் ஜீவாவின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் ‘வரலாறு முக்கியம்’ படம் வெளியாகியிருந்தது. படன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து தெலுங்கில் ‘யாத்ரா 2’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனாக நடித்திருந்தார் ஜீவா. இதனைத் தொடர்ந்து தற்போது பிளாக் என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News