ரஜினி பட வில்லனுக்கு வில்லனாக நடிக்கும் மம்முட்டி
நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்த விநாயகன் படத்தில் மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், காளை, மரியான், ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் ஜெயிலர் படத்தில் நடித்த கதாப்பாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படங்களில் நடித்து பிரபலம் ஆனது போல சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியும் இவர் பிரபலமாகியுள்ளார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் கேரளா மாநிலத்தில் இருந்து கோவா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி இவருக்கான இணைப்பு விமானம் ஐதராபாத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக கொச்சினில் இருந்து ஐதராபாத் ஷம்சாபாத் விமான நிலையத்திற்கு சென்ற விநாயகன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை இராணுவப் படையினரான சிஐஎஸ்எப் வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதனால் போலீசார் கைது செய்து இவரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது.
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 2016 ஆம் ஆண்டு ராஜீவ் ரவி இயக்கத்தில் வெளியான கம்மாட்டி பாடம் படத்தில் கங்கா என்னும் கதாபாத்திரவில் நடித்திருந்திருந்த விநாயகனின் நடிப்பு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் விநாயகன் பெற்றார்.
மலையாளத்தில் கம்மட்டிபாடம், தொட்டப்பன் போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியவர் விநாயகன். வில்லன், காமெடி, குணசித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விநாயகன். நடிகர் விநாயகன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வர்மன் என்ற கதாபாரத்தில் மலையாளம் கலந்து பேசும் அவரது பேச்சு மொழியும் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றது.
குறிப்பாக, இவர் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்து மனசிலாயோ என மலையாளத்தில் பேசும் வசனம் திரையரங்கில் அப்லாசை அள்ளியது. இந்த படத்தின் மூலம் அனைவரின் பேவரைட் வில்லனாக மாறிய விநாயகன் தொடர்ந்து மூன்று தமிழ் படங்களில், முக்கிய வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் மம்மூட்டி புதிய படத்தில் நடிகர் விநாயகனுக்கு வில்லனாக நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில், மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால், அவரால் நடிக்க முடியவில்லை.
Also read… ’வேட்டையன்’ படத்தில் நடிக்க ரஜினிக்கு இவ்வளவு சம்பளமா? வைரலாகும் தகவல்
நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ‘குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் பிருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலக, விநாயகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளரான மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வில்லன் நடிகர் ஆன விநாயகன் ஹீரோவாகவும், ஹீரோ நடிக்கும் மம்முட்டி வில்லனாகவும் நடிக்க இருப்பதால், மலையாள திரை உலகமே இந்த படத்தை ஆச்சரியத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.