5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மணிகண்டனின் அடுத்தப் படம் ‘குடும்பஸ்தன்’… வெளியானது போஸ்டர்

நித்தம் ஒரு வானம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார் மணிகண்டன். இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சான்வி மேக்னா நாயகியாக நடிக்கிறார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மணிகண்டனின் அடுத்தப் படம் ‘குடும்பஸ்தன்’… வெளியானது போஸ்டர்
குடும்பஸ்தன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2024 18:59 PM

நடிகர் மணிகண்டனின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘குடும்பஸ்தன்’ படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் பயணிக்கத் தொடங்கியவர் மணிகண்டன். சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டே கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள் படங்கள் மூலம் ஓரளவு கவனம் ஈர்த்த மணிகண்டன், விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்றார். காரணம் இந்தப் படத்தில் நடித்தது மட்டும் இன்றி இந்தப் படத்திற்கு இவர் தான் வசனம் எழுதினார் என்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட.

விக்ரம் வேதா திரைப்படத்துக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், நடிகராக ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இவரது இயக்கத்தில் நரை எழுதும் சுயசரிதம் என்ற படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து படங்களில் நடிகராக அடுத்தடுத்து கமிட்டாகிவரும் மணிகண்டன், தன்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதிக்காக ஒரு ஸ்கிரிப்டை எழுதி வருகிறார். விரைவில் அவரது இயக்கத்தில் அந்த படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Also read… தியேட்டரில் கெத்து காட்டும் ‘லப்பர் பந்து’… 8 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் நைட் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக மாறினார் நடிகர் மணிகண்டன். குறட்டையால் அவதிப்படும் இளைஞனும், அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுமே `குட் நைட்’. இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியான அவரது லவ்வர் திரைப்படமும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறையிடம் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து அசத்திய மணிகண்டன் தொடர்ந்து சினிமாவில் போராடி தனக்கான இடத்தை பிடித்து விட்டார். ஜெய்பீம் படத்தில் அவர் நடித்த நடிப்பு எல்லாம் வேறலெவல் சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read… ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான சசிகுமாருக்கு ஹேப்பி பர்த்டே

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ மூலம் நடிக்க வைத்திருந்தனர். அந்த கதாப்பாத்திரத்திற்கு நடிகர் மணிகண்டன் தான் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது, நித்தம் ஒரு வானம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார் மணிகண்டன். இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சான்வி மேக்னா நாயகியாக நடிக்கிறார். குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Kandan (@manikabali87)

இந்நிலையில், இப்படத்துக்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பஸ்தனாக பல்வேறு வேலைகளை செய்யும் மணிகண்டனின் வேலைப்பளுவை குறிப்பிடும் வகையில் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது போஸ்டர்.

Latest News