5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’வேட்டையன்’ படத்தில் நடிக்க ரஜினிக்கு இவ்வளவு சம்பளமா? வைரலாகும் தகவல்

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

’வேட்டையன்’ படத்தில் நடிக்க ரஜினிக்கு இவ்வளவு சம்பளமா? வைரலாகும் தகவல்
ரஜினி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Sep 2024 09:18 AM

வேட்டையன் படத்தில் நடிக்க ரஜினிகாந்த வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 20-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு படங்களில் ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. கங்குவா படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு மாற்றியது. இதனால் சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார். முன்னதாக மஞ்சுவாரியர், அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங் உட்படப் பலரும் டப்பிங் பேசிவிட்டனர். ரஜினி, கூலி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பேசுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் டப்பிங் பணியை முடித்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் ரஜினி போசியது கோலிவுட்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, “சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும். உங்ககிட்ட சாணக்கியத்தனமும் இருக்கு, சாமர்த்தியமும் இருக்கு என்று இயக்குநர் ஞானவேல் குறித்து பேசியுள்ளார்.

ரஜினி பட ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அவர் சொல்லும் குட்டி கதைக்காக ரசிகர்கள் காத்திருப்பதுண்டு. அந்தவகையில் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினிகாந்த் ஒரு குட்டி கதை சொல்லியிருக்கிறார்.

Also read… தியேட்டரில் மிஸ் பண்ணிடீங்களா அப்போ ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க – சூர்யா’ஸ் சாட்டர்டே ஓடிடி அப்டேட்

“வேட்டையன் பட ஷூட்டிங் தொடங்க இரண்டு நாட்கள் இருக்கும். அப்போது ஞானவேல் என்னிடம் வந்து, சார் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார். என்ன இப்போ வந்து பேச வேண்டும் என்கிறாரே என நினைத்துக்கொண்டு; சொல்லுங்க சார் என்றேன். உடனே அவர், சார் நீங்கள் நடித்த தளபதி படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன். புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை படங்கள் எல்லாம் எனது ஃபேவரைட். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா சார்; அந்த மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்று சொன்னார். உடனே நான் அவரிடம் ஒரு கதை சொன்னேன். அதாவது, உத்திரகாசில (ஹிமாலயாஸ்) டோபி ஒருத்தர் இருந்தார். அவர் துணியை துவைக்க வேண்டுமென்றால் கீழே ஓடும் ஆறுக்குத்தான் வர வேண்டும். அவரிடம் இருக்கும் கழுதையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு கீழே வந்து துணி துவைப்பார். அப்படி ஒருநாள் வந்து துணியை துவைத்துவிட்டு பார்க்கும்போது கழுதையை காணவில்லை. அந்த கழுதைதான் அவருக்கு உயிர், மூச்சு எல்லாமே. உடனே அவர் ஒருமாதிரி விரக்தி ஆகிட்டார். ஒருகட்டத்தில் மரத்தடியில் அமர்ந்திட்டார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் எல்லாம் இந்த டோபியை பார்த்து சாமியார்னு நினைத்து அவரிடம் பலன்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவருக்கென்று சிஷ்யர்களும் சேர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. உடனே அவரது சிஷயர்களோ, ஏங்க இப்படி பேசுறீங்க நீங்க ஒரு சாமியார் இப்படிலாம் பேசாதீங்கனு சொன்னாங்க. உடனே இவர், யோவ் நான் டோபியா. என் கழுதையை காணவில்லைனுதான் இப்படி ஆகிட்டேன். வெளியே சொன்னால் கதை கந்தலாகிடும் சொல்லாதீங்க என்று சொன்னார் என்றேன்.

இதை கேட்டுவிட்டு ஞானவேல் என்னிடம், ஏன் சார் இதை என்னிடம் சொல்றீங்க என்று கேட்டார். உடனே நான் அவரிடம், ‘சார் அந்த டோபியே நான்தான்’ என்றேன். தளபதில ஓகேயான ஷாட்டை மட்டும்தான் நீங்க பார்ப்பீங்க. அதுக்கு பின்னாடி எத்தனை டேக் போனுச்சுனு எனக்கு மட்டும்தான் தெரியும் என்று ரஜினி சொன்ன கதை அரங்கையே சிரிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இது எந்த அளவிற்கு உணமை என்பது தெரியவில்லை.

Latest News