‘கவுண்டம்பாளையம்’ படம் ரிலீஸ் ஆகாது… நடிகர் ரஞ்சித் புகார்! - Tamil News | Actor Ranjith said goundampalayam movie postponed | TV9 Tamil

‘கவுண்டம்பாளையம்’ படம் ரிலீஸ் ஆகாது… நடிகர் ரஞ்சித் புகார்!

Published: 

05 Jul 2024 11:19 AM

Actor Ranjith: "கவுண்டம்பாளையம் பட ரிலீஸ் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தப் படத்துக்காக டிக்கெட் புக் செய்தவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் வெளிவரக்கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கிறார்கள். எனவே இதனை வெளியிட தயாராக இருந்த தியேட்டர் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர்.

‘கவுண்டம்பாளையம்’ படம் ரிலீஸ் ஆகாது... நடிகர் ரஞ்சித் புகார்!

நடிகர் ரஞ்சித்

Follow Us On

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்து இருக்கும் கவுண்டம்பாளையம் படம் இன்று வெளியாகாது என்றும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொன்விலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, தேசிய கீதம், புதுமைப்பித்தன், சேரன் சோழன் பாண்டியன், நினைவிருக்கும் வரை, சபாஷ், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது இயக்கி நடித்து இருக்கும் கவுண்டம்பாளையம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் படம் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி பலர் கண்டனங்களை தெரிவித்தனர். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக தான் இயக்கியும், நடித்தும் உள்ளதாகவும் கோவை பகுதியை சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீரை  மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டதாகவும் பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நாடக காதல் தான் இது எனவும் குறிப்பிட்டார்.

சமூக நீதி என்று சொல்பவர்களை பார்த்தாலே கடுப்பாக தான் இருக்கும். நீங்கள் சொல்லும் எதுவும் சமூக நீதி இல்லை. இட ஒதுக்கீட்டின் போது சாதி அடிப்படையில் தானே அந்த சலுகைகளை பெறுகிறீர்கள் அப்போது மட்டும் சமூக நீதி பற்றி பேச மாட்டீர்கள். மற்ற இடங்களில் மட்டும் சமூக நீதி என்று பேசுவது ஏன் என்று பேசிய அவர் தான் சாதி வெறியன் தான் என்று தெரிவித்துள்ளார். சாதி குறித்தும் சமூக நீதி குறித்தும் நடிகர் ரஞ்சித் பேசியது பெறும் சர்ச்சையை கிழப்பியது.

இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு அவரைப் பிரிந்த ரஞ்சித் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அந்த வாழ்க்கையும் நீடிக்கவில்லை. இதனை குறிப்பிட்ட நெட்டிசன்கள், நீங்களே காதல் திருமணம்தான் செய்தீர்கள். இப்போது ஏன் பிரிந்தீர்கள். அப்போ நீங்களும் நாடக காதல்தான் செஞ்சீங்களா சார் என்றும் தொடர்ந்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

Also read… Rajini: ‘கூலி’ பட ஷூட்டிங்… ஹைதராபாத் பறந்த ரஜினி!

இந்த நிலையில் இன்று கவுண்டம்பாளையம் படம் வெளியாக இருந்த நிலையில் படம் தள்ளி வைக்கப்படுள்ளதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கவுண்டம்பாளையம் பட ரிலீஸ் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தப் படத்துக்காக டிக்கெட் புக் செய்தவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் வெளிவரக்கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கிறார்கள். எனவே இதனை வெளியிட தயாராக இருந்த தியேட்டர் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர்.

நாடகக் காதல் குறித்தும், பெற்றோரின் வலியையும் படமாக்கி உள்ளேன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது.ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம்என்று எனக்குத் தெரியும். என் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் சாதாரண விவசாயிகள்தான். கோடீஸ்வரர்கள் கிடையாது. நான் பிறந்த மண்ணில் எடுத்த திரைப்படம் வெளியாகாதது மிகுந்த வருத்தம், வேதனையை அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிதான், என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதிலாக இருக்கும்” என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version