5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sivakarthikeyan: அஜித் சொன்ன வார்த்தை.. தப்பை உணர்ந்த சிவகார்த்திகேயன்!

Amaran Audio Launch: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் “அமரன்”. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் சோனி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அமரன் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

Sivakarthikeyan: அஜித் சொன்ன வார்த்தை.. தப்பை உணர்ந்த சிவகார்த்திகேயன்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 21 Oct 2024 15:05 PM

அமரன் பட விழா: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் “அமரன்”. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் சோனி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அமரன் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின்  டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் மற்றும் அஜித் பற்றி நெகிழ்ச்சியாக பேசினார்.

அஜித் பற்றி பேசும்போது, “நண்பர் ஒருத்தரோட தீபாவளி கெட் டூ கெதர் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் உள்ள கதவை திறந்தால் உள்ளே அஜித்குமார் நின்று கொண்டிருந்தார். அவர் என்னை கைகொடுத்து வரவேற்றார். பின்னர் என்னிடம் Welcome to “Big League” என்ற வார்த்தையை சொன்னார். அதற்கு நான் எனக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல சார் என கூறினேன். உடனே விளக்கம் கொடுத்த அஜித், உங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து சிலர் பாதுகாப்பில்லை என உணர்ந்தாலே நீங்க இந்த “Big League” உள்ள வந்துட்டீங்கன்னு அர்த்தம் என சொன்னாரு.

Also Read: வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் பிரபலம் இந்த சிறுமி – யார் தெரியுதா?

அங்க நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். என்னுடைய சீனியர்களாக இருப்பவர்கள் என்னை அழைத்து சிவா இப்படி பண்ணங்க, அப்படி பண்ணுங்க என ஈஸியா சொல்லிட்டி போய் விடலாம். ஆனால் ஒரு விமர்சனம் நமக்காக வைக்கப்பட்டால் அதற்கான அர்த்தத்தை முதலில் பார்க்க வேண்டும் என்பது தான். படம் சரியில்லை என சொல்வது சரியான விமர்சனம். படத்தை திருத்திக்க வேண்டும் என்பது அதன் அர்த்தம். ஆனால் நீயே காலி என சொல்லும்படியான விமர்சனம் வந்தால் அதனை நம்பாதே” என உணர்ந்து கொண்டேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Also Read: Diwali: தீபாவளி கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? – ஆன்மிகம் சொல்லும் நிகழ்வு இதுதான்!

தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனை எல்லாம் சென்னையில் மழை வருவது போல இருக்கும். அதாவது நாம் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும்போது எந்த பிரச்சனையும் வராது. ஆனால் நாம் ஜாலியாக இருக்கும்போது அது ஒரு காட்டு காட்டி விட்டு சொல்லும். இப்போது நாம் எதிர்நீச்சல் போட்டு ஆக வேண்டும். எனவே எப்போதும் எல்லோரும் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருங்கள். இது உங்களுடைய வாழ்க்கை” என ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது சிவகார்த்திகேயனிடம் நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அந்த படத்தின் காட்சியின் விஜய் சிவகார்த்தியேனிடன் துப்பாக்கி வழங்கியது குறித்த காட்சி பற்றியும், அந்த ஷூட்டிங் போது சிவகார்த்திகேயனுக்கு வாட்ச் ஒன்றை விஜய் பரிசளித்திருந்ததை குறிப்பிட்டும் அந்த கேள்வி இடம் பெற்றிருந்தது. அதன்படி துப்பாக்கி மற்றும் வாட்ச் இது இரண்டில் எது ஸ்பெஷல்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு இவற்றையெல்லாம் விட தளபதி கொடுத்த அந்த அன்பு தான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியாக பேசினார். இந்த ஆடியோ நிகழ்ச்சியின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News