சினிமாவில் நடிக்க வந்ததற்கு இதுதான் காரணம்… நடிகர் சூர்யா சொன்ன விஷயம்!
10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
நடிகர் சூர்யா சினிமாவில் நடிக்க வந்ததற்கு தனது அம்மா தான் காரணம் என பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.
கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். ஆனால் அதே தேதியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘கங்குவா’ படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் சூர்யா உட்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா புரமோஷன் போது பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் தான் நடிக்க வந்ததற்கு காரணம் தனது அம்மா வாங்கிய கடன் தான் என்று தெரிவித்துள்ளார். சூர்யாவின் அம்மா அவரது தந்தைக்கு தெரியாமல் கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த கடனை தான் அடைக்க நினைத்ததால் சம்பாதிக்கவே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார்.
Also read… வைரலான வீடியோ… அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி!
படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்குவதற்கு முன் கார்மென்ஸ் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா. முதல் 4 வருடங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாத சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம்.
2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது. ராம் கோபால் வர்மாவின் கேங்ஸ்டர் படமான ரக்த சரித்ரா 2 மூலம் சூர்யா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது.