கங்குவா பட புரமோஷன் போது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட சூர்யா!
இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.
கங்குவா பட புரமோஷன் போது ரசிகர்களுடன் நடிகர் சூர்யா செல்பி எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா.
கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் கங்குவா படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பீரியட் காலத்தில் நடக்கும் சண்டை காட்சிகளும், சாகச காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தீவு, மர்மம் என பின்னணி குரலுடன் தொடங்கும் ட்ரெய்லர் பிரம்மாண்டத்தின் காட்சியாக விரிகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா தோன்றுகிறார். அதே சமயம் டிரெய்லரின் இறுதி காட்சியில் ஒருவர் மண்டை ஓடுகள் அடங்கிய மாலையை வீசியபடி குதிரையில் வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த குதிரையில் வரும் நபரை பார்த்து சூர்யா தனது உதட்டோரம் ஒரு சிரிப்பை காட்டுவது அந்த வீடியோவில் தெரிகிறது. அது யார் என்று காட்டப்படவில்லை என்றாலும் அது சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். முன்னதாக கார்த்தி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்ததால் அது கார்த்தி என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.
கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். ஆனால் அதே தேதியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘கங்குவா’ படத்தின் புரொமோஷன் பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
#KanguvaFromNov14 pic.twitter.com/ZXETNWIKM4
— Studio Green (@StudioGreen2) October 17, 2024
வருகிற நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ந் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, படத்திற்கான புரமோஷன் நேர்காணல்களில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். இன்று மும்பையில் நடைபெற்ற புரமோஷனில் சூர்யா கலந்துகொண்டார். அப்போது, ரசிகர்கள் அவரை சூழ்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். நடிகர் சூர்யாவும் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.