Sirai Movie: சூர்யா 44 படத்தின் பெயர் இதுதானா? கோலிவுட்டை சுற்றும் தகவல்! - Tamil News | Actor Suriyas 44th Movie Named As Sirai | TV9 Tamil

Sirai Movie: சூர்யா 44 படத்தின் பெயர் இதுதானா? கோலிவுட்டை சுற்றும் தகவல்!

Published: 

16 Jul 2024 10:45 AM

Actor Suriya Movie Update: நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் சூர்யா 44 படக்குழு படப்பிடிப்பு ஆரம்பரம் என வீடியோ ஒன்றின் மூலம் கடந்த ஜூன் 2-ம் தேதி வீடியோ மூலம் அறிவித்தது.

Sirai Movie: சூர்யா 44 படத்தின் பெயர் இதுதானா? கோலிவுட்டை சுற்றும் தகவல்!

சூர்யா

Follow Us On

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 44-வது படத்திற்கு ‘சிறை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜின் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. முன்னதாக படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி சூர்யாவின் 44-வது படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அவரது பிறந்த நாள் அன்று அறிவிப்பு வெளியானது. மேலும் இதுவரை சந்தோஷ் நாராயணன், சூர்யா படத்திற்கு இசையமைத்தது கிடையாது என்பதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடதக்கது.

படத்தில் பிரபல மலையாள நடிகர் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் -தனுஷ் கூட்டணியில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டாவது முறையாக அவர் சூர்யா 44 படத்தில் இணைய உள்ளார். இந்நிலையில் சூர்யா உடன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பது உறுதியானது.

Also read… Tamilaga Vettri Kazhagam : திருச்சி டார்கெட்.. யாத்திரை பிளான்.. விஜய் போடும் அரசியல் பிளான்.. தீவிரமாகும் தமிழக வெற்றிக் கழகம்!

நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் சூர்யா 44 படக்குழு படப்பிடிப்பு ஆரம்பரம் என வீடியோ ஒன்றின் மூலம் கடந்த ஜூன் 2-ம் தேதி வீடியோ மூலம் அறிவித்தது.

இந்த நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்துக்கு சிறை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும்; சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version