5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… விஜய் ஆண்டனி கருத்து!

Vijay Antony: தமிழ், தெலுங்கு , மலையாளம் என எல்லா மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. குணா படத்தின் கண்மணி அன்போடு… பாடலோடுதான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைட்டில் தொடங்கும். குழிக்குள் விழுந்த நண்பனை மேலே மீட்டு வருகையில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற கமலின் குரல் ஒலிக்கும். குழிக்குள் விழுந்தவன் பிழைப்பானா, அவனை காப்பாற்ற முடியுமா என்று சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு, குழிக்குள் விழுந்தவனை நண்பர்கள் மீட்கும் தருணம் உணர்ச்சிகரமானது.

’மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… விஜய் ஆண்டனி கருத்து!
விஜய் ஆண்டனி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 May 2024 10:45 AM

மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜ நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார். ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனியிடம் இசையமைப்பாளர் இளையராஜா மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

கேரளாவின் மஞ்சும்மல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், அவர்களில் ஒருவன், டெவில்ஸ் கிச்சன் என்கிற 900 அடிகள் கொண்டதாகக் கருதப்படும் மலைக்குகைக்குள் விழுந்துவிட, உடன் வந்த நண்பர்கள் போராடி அவனை மீட்ட உண்மைக் கதையைத் தழுவி மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. இயக்குநர் சிதம்பரம் படத்தை இயக்க, சௌபின் ஷகிர், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்திருந்தனர். சௌபின் ஷகிர் தனது பறவா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். அபாயகரமான டெவில்ஸ் கிச்சன் குகை பகுதியில் கமல் தனது குணா படத்தை எடுத்த பிறகே அந்தக் குகை குறித்து வெளியுலகுக்கு தெரிய வந்தது. அன்று முதல் அக்குகை, குணா குகை என்று அழைக்கப்படுகிறது. குணாவில் இடம்பெறும், கண்மணி அன்போட… பாடல் காட்சி அங்கு வைத்துதான் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்து குணா குகைக்கு சென்றவர்கள்தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். தமிழ், தெலுங்கு , மலையாளம் என எல்லா மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. குணா படத்தின் கண்மணி அன்போடு… பாடலோடுதான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைட்டில் தொடங்கும். குழிக்குள் விழுந்த நண்பனை மேலே மீட்டு வருகையில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற கமலின் குரல் ஒலிக்கும். குழிக்குள் விழுந்தவன் பிழைப்பானா, அவனை காப்பாற்ற முடியுமா என்று சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு, குழிக்குள் விழுந்தவனை நண்பர்கள் மீட்கும் தருணம் உணர்ச்சிகரமானது. அந்த நேரத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற பாடல்வரி ஒலித்து திரையரங்கிள் உள்ள ரசிகர்களின் உணர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

Also read… வாரிசு நடிகர்களால் எனது வாய்ப்பு பறிக்கப்பட்டது… நடிகை ரிச்சா சதா!

அந்த படத்திற்கு பிறகு சமூக வலைதளத்தில் அந்த பாடல் நண்பர்களுக்கான ஆந்தமாக மாறியது. அனைவரும் தங்களது நணபர்களுக்கு அந்த பாடலை டெடிகேட் செய்வது, ரீல்ஸ் போடுவது என சமூக வலைதளத்தின் உச்சத்திற்கு அந்த பாடல் சென்றது. இந்நிலையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதுகுறித்து பேசிய விஜய் ஆண்டனி, மஞ்சுமல் பாய்ஸ் படம் வெற்றியடைந்ததும் படக்குழுவினர் கமல் சாரை நேரில் சந்தித்தது போல இளையராஜா சாரையும் நேரில் சந்தித்து இருந்தால் இது இந்த அளவிற்கு போயிருக்காது என்று நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Latest News