Cinema Rewind: என்னையே வில்லனாக்குறியா? அர்ஜூன் கேள்வியால் பம்மிய விஷால்!
தமிழில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் சர்ஜா. ஜென்டில் மேன், முதல்வன், ரிதம், ஏழுமலை, ஜெய்ஹிந் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு வில்லன் மற்றும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக விஜயுடன் நடித்த லியோ படம் வெளியான நிலையில், அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர விருந்து, மற்றும் தீயவர்கள் குலைகள் நடுங்க என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜூன் தக்கு போன் செய்து “தேரிக்கே ஹீரோவா இருக்க என்னை வில்லனாக்குறியா” என்று ஒரு படத்தில் நடிப்பதற்கு கேட்டபோது விஷாலிடம் கூறியதாக அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகனான அர்ஜுன் 1981 ஆம் ஆண்டு வெளியான சிம்மதா மரி சைன்யா என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். பின்னர் 1984 ஆம் ஆண்டு ராமநாராயணன் இயக்கிய ‘நன்றி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தமிழ், கன்னடம் என மாறி மாறி நடித்து வந்த அர்ஜூனுக்கு 1985-ம் ஆண்டு வெளியான யார்? என்கின்ற படம் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ஆக்ஷன் கிங் அர்ஜூன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தேசத்தை காக்கும் தொடர்பான படங்களில் நடித்தவர்களில் மிக முக்கியமானவர் அர்ஜூன். சுதந்திர தினத்தில் பிறந்ததால் இவரது படங்களில் தேசப்பற்று மிகுதியாக இருக்கும். தேசப்பற்றை முன்னிறுத்திய படங்களிலும், தேசப்பற்றை மையமாகக் கொண்ட பல காவல்துறைப் படங்களிலும் நடித்துள்ளார். அர்ஜூன் இயக்கிய ஜெய்ஹிந்த் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
Also read… தனுஷ் பட நாயகி தான் இந்த சிறுமி… யார் தெரியுதா?
தமிழில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் சர்ஜா. ஜென்டில் மேன், முதல்வன், ரிதம், ஏழுமலை, ஜெய்ஹிந் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு வில்லன் மற்றும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக விஜயுடன் நடித்த லியோ படம் வெளியான நிலையில், அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர விருந்து, மற்றும் தீயவர்கள் குலைகள் நடுங்க என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் விஷால் முன்னதாக அளித்தப் பேட்டியில் அர்ஜூன் குறித்து பேசியுள்ளார். அதில் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜூனிடம் பேசியது குறித்து தெரிவித்துள்ளார். இரும்புத்திரை என்பது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2018 ஆம் ஆண்டு மே 10 ம் தேதி வெளியான தொழில்நுட்ப-த்ரில்லர் வகையைச் சேர்ந்த அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்தது, ஒரு இராணுவ அதிகாரியைச் சுற்றி கதை மையமாக உள்ளது.
இந்தப் படத்தில் அர்ஜூனை வில்லனாக நடிக்க வைப்பது குறித்து விஷால் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் மித்ரன் விஷாலிடம் படத்தின் கதையை கூறிய பிறகு இந்த படத்தில் அர்ஜூனை வில்லனாக நடிக்க வைப்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஷால் நீங்களே அவரிடம் பேசிக்கோங்க என்று கூறியுள்ளார். பின்னர் மித்ரன் அர்ஜூனிடம் கதையைக் கூறியபிறகு அர்ஜூன் விஷாலுக்கு போன் செய்து “தேரிக்கே ஹீரோவா நடிக்கிற என்ன வில்லனாக்குறியா” என்று கேட்டுள்ளார். பின்னர் அந்த கதையில் அர்ஜூனின் கேரக்டர் எவ்வளவு ஸ்டார்ங் என்று கூறி சம்மதிக்க வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.