டூப் வேண்டாம்… நானே பன்றேன் – படத்திற்காக 16-வது மாடியில் இருந்து குதித்த அஞ்சலி? - Tamil News | Actress Anjali does risky stunt sequences herself Eegai movie | TV9 Tamil

டூப் வேண்டாம்… நானே பன்றேன் – படத்திற்காக 16-வது மாடியில் இருந்து குதித்த அஞ்சலி?

Updated On: 

08 Jul 2024 13:47 PM

Actress Anjali: சமீபத்தில் இவரது நடிப்பில் ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பட நிகழ்வின்போது மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலானது. பிரபலங்கள் உட்பட நெட்டிசன்கள் பலரும் அந்த நிகழ்விற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அஞ்சலி அது தற்செயலாக நடந்த செயல் அதனை அவ்வளவு பெரியதா மாற்ற வேண்டாம் என்று அதற்கு ஒரு முடிவு வைத்தார்.

டூப் வேண்டாம்... நானே பன்றேன் - படத்திற்காக 16-வது மாடியில் இருந்து குதித்த அஞ்சலி?

அஞ்சலி

Follow Us On

நடிகை அஞ்சலி தனது படத்தின் ஸ்டண்ட் காட்சியில் டூப் போடாமல் தானே 16-வது மாடியில் இருந்து குதித்து அந்த ஸ்டண்ட் காட்சியில் நடித்ததாக தகவல்கள் வைரலாகி வருகின்றது. தெலுங்கு திரை உலகின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கி இருந்தாலும் நடிகை அஞ்சலியின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமா தான். இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்தப் படத்தில் அவர் ஆனந்தி என்ற கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.

இந்நிலையில் அஞ்சலி தற்போது ஈகை என்ற படத்தில் நடித்து வருகிறார். அது அவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் வேலாயுதம் என்பவர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஒரு காட்சிக்காக அஞ்சலி 16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து இருக்கிறாராம். டூப் வேண்டாம் என சொல்லி அவரே நடித்து கொடுத்து இருக்கிறார்.  இந்த செய்தி தற்போது சினிமா வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றது.

தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ விரைவில் வெளியாக இருக்கிறது.

Also read… எஸ்டிஆர் 48லிருந்து விலகிய ராஜ்கமல் நிறுவனம்? தீயாய் பரவும் தகவல்!

சமீபத்தில் இவரது நடிப்பில் ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பட நிகழ்வின்போது மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலானது. பிரபலங்கள் உட்பட நெட்டிசன்கள் பலரும் அந்த நிகழ்விற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அஞ்சலி அது தற்செயலாக நடந்த செயல் அதனை அவ்வளவு பெரியதா மாற்ற வேண்டாம் என்று அதற்கு ஒரு முடிவு வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த பிரச்சனை இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாதாம்..
தினமும் வெல்லம் கலந்த பால் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
Exit mobile version