நடிகை அதுல்யாவின் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்த பணிப்பெண் கைது – என்ன காரணம்?
Actress Athulya Ravi: கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி தனது வீட்டு வேலைக்காக செல்வி என்பவரை பணியமர்த்தியிருந்தார். அவர் நீண்ட நாட்களாக வீட்டு வேலை செய்து வந்த நிலையில் கடந்தசில மாதங்களாக பீரோவில் வைத்திருந்த பணம் திருடு போவதாக விஜயலட்சுமிக்கு சந்தேகம் எழுந்தது.
நடிகை அதுல்யா ரவியின் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. அடுத்தது சாட்டை, கேப்மாரி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். கேப்மாரி படத்தில் கவர்ச்சி காட்டியதைத் தொடர்ந்து சாந்தனுடன் சேர்ந்து முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்த போதும் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதைத் தொடர்ந்து வட்டம், கடாவர் போன்ற படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்கள், விடியோக்கள் மூலம் தனக்கென பாலோயர்களை வைத்துள்ளார். இந்நிலையில் அதுல்யா ரவியின் வீட்டில் பணம் மற்றும் பாஸ்போர்ட் காணவில்லை என்று அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் அவரது வீட்டில் பணிபுரியும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி தனது வீட்டு வேலைக்காக செல்வி என்பவரை பணியமர்த்தியிருந்தார். அவர் நீண்ட நாட்களாக வீட்டு வேலை செய்து வந்த நிலையில் கடந்தசில மாதங்களாக பீரோவில் வைத்திருந்த பணம் திருடு போவதாக விஜயலட்சுமிக்கு சந்தேகம் எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போயுள்ளது. அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
Also read… ‘கேஜிஎஃப் – 3’ வருமா? – பிரசாந்த் நீல் சொன்னது இதுதான்!
புகாரின்பேரில் அதுல்யா ரவியின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் செல்வி மற்றும் அவரது தோழி இருவரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முதலில் பாஸ்போர்ட்டை தாங்கள் எடுக்கவில்லை என கூறி சாதித்துள்ளனர். போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், அதிகமாக எடுத்தால் தெரிந்துவிடும் என்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை எடுத்தோம், அது பாஸ்போர்ட் என்று தெரியாமல் எடுத்துவிட்டோம், பின் அதை பயத்தில் கிழித்துவிட்டோம் என்று அந்த பணிப்பெண்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.