5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“ஒருத்தர் நிஜ வாழ்க்கையில் இவ்ளோ லவ் பண்ண முடியுமா”- நடிகை சாய் பல்லவி..!

Actress Sai Pallavi : தமிழ்த் திரைப்பட முன்னணி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி என இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமான இது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படமாகும். தற்போது இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோவை இப்படக்குழு வெளியிட்டது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, நடிகர் கமல்ஹாசன், இந்து மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை சாய் பல்லவி கூறிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ஒருத்தர் நிஜ வாழ்க்கையில் இவ்ளோ லவ் பண்ண முடியுமா”- நடிகை சாய் பல்லவி..!
கோப்பு புகைப்படம்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 09 Oct 2024 14:59 PM

அமரன் : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் ராணுவ வாழ்க்கைக் குறித்தும் மற்றும் அவரின் காதல் மனைவியின் வாழ்க்கையை மைய கருவாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார் மற்றும் இத்திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான “ராஜ்கமல் பிலிம்ஸ்”  தயாரித்துள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோவை திரை படக்குழு இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் நடிகை சாய் பல்லவி இந்த கதையில் நடிப்பதற்கு நான் தான் புண்ணியம் பண்ணிருக்க வேண்டும், அதே மாதிரி ஒருத்தரால் இவளோ லவ் பண்ணமுடியுமா என்று இந்த கதையின் மூலம் தான் புரிஞ்சிக்கிட்டேன், இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது” என்று கூறிய விஷயங்கள் இணையத்தில் நடிகை சாய் பல்லவியின் மீதான மதிப்பை தற்போது அதிகப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க :70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.. விருதைப் பெற்ற பிரபலங்களின் விவரங்கள்..!

 

கதை உருவாக்கம் :

இந்த திரைப்படக்கதையை எழுத்தாளர் சிவ ஆரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய “மோஸ்ட் ஃபியர்லெஸ்” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு பின்னர் இயக்குநர் ராஜ்குமாரின் கைவண்ணத்தில் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் 21 திரைப்படமாக அமையும் இந்த திரைப்படத்தின் 2022ல் #SK21 என்ற தற்காலிக பெயரில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் படப்பிடிப்பு கடந்த 2023ல் தொடங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு குறிப்பாகக் காஷ்மீர், சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :வேட்டையன் படத்தில் ஃபகத் பாசில் நடிப்பு குறித்து பேசிய ரஜினி!

 

இந்த திரைப்படத்திலிருந்து கடந்த மாதம் நடிகை சாய் பல்லவின் திரைப்பட அறிமுக வீடியோ ஒன்றா படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவில் மறந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் காதலி கதாபாத்திரத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற ரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த அறிமுக வீடியோவில் நடிகை சாய் பல்லவின் பகுதியானது இணையத்தில் வைரலாகியது. இணையத்தில் அனைத்தும் சாய் பல்லவின் புகழ் பரவிக் கிடந்தது. நிஜ வாழ்க்கையில் ஒருத்தர் இப்பட்டியெல்லாம் இருப்பாரா என ரசிகர்களையே வாயைப் பிளக்கவைக்கும் அளவிற்கு மரண மாஸ் ஆக நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் கடந்த வாரம் வெளியான பாடலான “ஹே மின்னலே” என்ற பாடல் இணையத்தில் ட்ரெண்டிங் பாடல்களில் தற்போது முதலாவது இடத்திலிருந்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோவானது வெளியிடப் பட்டுள்ளது அதில் நடிகை சாய் பல்லவி கொடுக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :சூர்யா படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி? வைரலாகும் தகவல்

நடிகை சாய் பல்லவி :

அதில் “நான் எப்போதும் படத்தின் கதையைக் கேட்கமாட்டேன் ஸ்கிரிப்ட் மட்டும் படிப்பேன். அதே மாதிரி பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது இந்த கதையின் மீது எனக்கு நிறையச் சந்தேகம் இருந்தது, அப்போது இயக்குநரிடம் அந்த கதையைக் கேட்பேன் அவரும் எனக்குக் கூறுவார், அப்போது நான் இந்த திரைப்படத்தில் நடிக்க அதிகம் புண்ணியம் பண்ணிருக்க வேண்டும் என எனக்கு தெரிந்தது, அந்த மாதிரி ரியல் இந்துவைச் சந்திக்கும் போது இந்த கதையில் எனக்கு அதிகம் சந்தேகம் இருந்தது எப்படி ஒருத்தரால் இப்படியெல்லாம் பண்ணிருக்க முடியுமா, ஒருத்தரால் இவளோ லவ் பண்ணமுடியுமா இந்த கதையின் மூலம் தான் புரிஞ்சிக்கிட்டேன், சில விஷயங்களில் ஆவங்களும் என்ன மாதிரி செய்வது போல் இருக்கும் அதன் பிறகு புரிஞ்சிக்கிட்டேன் இந்த திரைப்படத்தில் நான் தான் இந்து மாதிரி நடிக்கணும்” இந்த மாதிரி இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோவில் குழந்தை போலப் பேசிய நடிகை சாய் பல்லவியின் இந்த தகவல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பல்லவியின் மதிப்பை உயர்த்தி வருகிறது.

இதையும் படிங்க :ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம்..! இயக்குநர் யார் தெரியுமா..?

Latest News