5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான்” – சமந்தா ஓபன் டாக்

Actress Samantha Prabhu: சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

”கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான்” – சமந்தா ஓபன் டாக்
சமந்தா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2024 10:54 AM

கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான் என நடிகை சமந்தா ஓபனாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என அவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. இவரது நடிப்பில் தமிழில் வெளியான் கத்தி, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், தெறி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் சமந்தா.

சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகும் அதிக கிளாமரான காட்சிகளில் சமந்தா நடிக்க நாக சைதன்யா விரும்பாததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா. எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா படு கிளாமராக நடனமாடியது இணையத்தில் காட்டுத்தீ போல பேசுபொருளானது.

இந்நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனால் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

Also read… ”மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார் அமலா பால்” – மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு!

சமந்தா டேக் 20 என்ற பெயரில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பேசி வருகிறார். அப்படி சமீபத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் சிலவகை உணவுகள், பானங்களை தவிர்ப்பது குறித்தும் விளக்கினார். அப்போது ஒருவர், ஆரோக்கியமற்ற பிராண்ட் ஒன்றில் சமந்தா விளம்பர தூதராக இருந்தது பற்றி கேட்டிருந்தார். அதற்கு சமந்தா, கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான், வேண்டும் என்றே செய்யவில்லை, தெரியாமல் செய்த தவறு அது. உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பர படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன், இப்போது விழிப்பாக இருக்கிறேன் என பேசியுள்ளார்.