5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’ – நடிகை டாப்ஸி காட்டம்

வழக்கமான ஹீரோயினாக வலம்வந்த டாப்ஸி, பேபி, பிங்க், தி காஸி அட்டாக், பத்லா, மிஷன் மங்கள், தப்பாட், ஹசீனா தில்ரூபா, ராஷ்மி ராக்கெட் படங்களின் மூலம் தானொரு தனித்துவமான நடிகை என்பதை நிரூபித்தார். இந்தியில் நாயகி மையப் படங்களில் நடிக்குமளவுக்கு செல்வாக்குப் பெற்றார்.

’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’ – நடிகை டாப்ஸி காட்டம்
நடிகை டாப்ஸி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2024 10:32 AM

’நான் நடிகை, பொது சொத்து கிடையாது’ என நடிகை டாப்ஸி காட்டமாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மாடலிங் துறையில் இருந்துவந்த நடிகை டாப்ஸி பன்னு கடந்த 2010 இல் முதலில் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2011-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். முதல் படத்திலேயே டாப்ஸியை அரவணைத்துக் கொண்டது தமிழ் சினிமா. ஆடுகளம் படத்தில் வரும் ‘வெள்ளாவி வச்சுத்தான் உன்ன வெளுத்தாய்ங்களா’ என்ற பாடல் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் வரிசையாக பல படங்களில் நடித்தார் டாப்ஸி. இவர் 2013 ல் வருண் தவான் படத்தில் நடித்ததன் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

வழக்கமான ஹீரோயினாக வலம்வந்த டாப்ஸி, பேபி, பிங்க், தி காஸி அட்டாக், பத்லா, மிஷன் மங்கள், தப்பாட், ஹசீனா தில்ரூபா, ராஷ்மி ராக்கெட் படங்களின் மூலம் தானொரு தனித்துவமான நடிகை என்பதை நிரூபித்தார். இந்தியில் நாயகி மையப் படங்களில் நடிக்குமளவுக்கு செல்வாக்குப் பெற்றார்.

நடிகை டாப்ஸி பன்னு அறிமுகமானது என்னமோ இந்தி திரைப்படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சையமான முகமாக மாறியது ஆடுகளம் படத்தில் தான். ‘அட வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாங்களா’ என அந்த படத்தில் டாப்ஸியின் நிறத்திற்கு எழுதப்பட்ட பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

Also read… ’வாழை’ படத்தின் மேக்கிங் வீடியோ இதோ!

அந்த படத்தை தொடர்ந்து, காஞ்சனா 2 , வை ராஜா வை, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற டாப்ஸிக்கு மிஷன் மங்கள், சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தன. குறிப்பாக கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் படமான சபாஷ் மிது திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ‘பாப்பரசி’கள் குறித்து நடிகை டாப்சி காட்டமாக பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. ‘நான் பிரபலமான ஒரு நபர், பொது சொத்து கிடையாது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் ‘இல்லை என்றால் இல்லை’ ஆனால், அதுவே நாங்கள் கூறினால் ஏற்க மாட்டார்கள். நான் முதலில் பெண். அதன்பிறகுதான் நடிகை. நான் இப்படி சொல்வதால், இது எனக்கு ஏற்ற தொழில் இல்லை என சிலர் நினைக்கலாம். ஆனால், நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில்,’ என்று தெரிவித்துள்ளார்.

Latest News