5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகைகளுக்குள் அந்த உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும்… தமன்னா ஓபன் டாக்!

Tamannaah Bhatia: தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய படங்களில் நடிகை தமன்னா பாட்டியா நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, சந்தோஷ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா என இரண்டும் முன்னணி நடிகைகள் என்பதால் படத்தில் அவர்களிடையே போட்டி நிலவியதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.

நடிகைகளுக்குள் அந்த உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும்… தமன்னா ஓபன் டாக்!
தமன்னா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 07 Jun 2024 12:27 PM

நடிகைகளுக்குள் போட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி வெளியான சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகனானார் நடிகை தமன்னா. தமிழில் 2006-ம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் தமன்னா. அதனைத் தொடர்ந்து கல்லூரி படித்தில் நடித்ததன் மூலம் தனித்து தெரியப்பட்டார் தமன்னா. தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பிசியாக நடிக்க தொடங்கினார். சுறா, வீரம், அயன் என அனைத்தும் ரசிகர்களின் மனதில் அவர் நீங்க இடம் பிடிக்க உதவியது. படிக்காதவன், பையா படங்களில் தமன்னாவின் நடிப்பு தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. பாகுபலியில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பான் இந்திய அளவில் தமன்னா பிரபலம் அடைந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய படங்களில் நடிகை தமன்னா பாட்டியா நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, சந்தோஷ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா என இரண்டும் முன்னணி நடிகைகள் என்பதால் படத்தில் அவர்களிடையே போட்டி நிலவியதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவியது.

Also read… வசூலில் பட்டையை கிளப்பும் ‘கருடன்’… இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா?

இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம். சிலர் இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும் நாம் நம்மை மாதிரியே நடித்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

Latest News