5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகை அஞ்சலியை தள்ளிய பாலகிருஷ்ணா.. போதை காரணமா? வைரலாகும் வீடியோ!

Balakrishna Viral Video : அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த விழாவில் மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். ஆனால் இருவரும் அதை கவனிக்காமல் இருந்ததால் தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளினார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி, பின்னர் சுதாரித்துக் கொண்டு சிரித்தார். கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் கூட்டமும் இதை பார்த்து ஆராவாரம் செய்தனர்.

நடிகை அஞ்சலியை தள்ளிய பாலகிருஷ்ணா.. போதை காரணமா? வைரலாகும் வீடியோ!
நடிகை அஞ்சலியை தள்ளிய பாலகிருஷ்ணா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 May 2024 15:17 PM

விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள படம் ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பட நிகழ்வின்போது மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலங்கள் உட்பட நெட்டிசன்கள் பலரும் அந்த நிகழ்விற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. 63 வயதிலும் நாயகனாக நடித்து வரும் இவருக்கு ஆந்திராவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலைய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் வழக்கமாக உள்ளது.

தெலுங்கு திரை உலகின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கி இருந்தாலும் நடிகை அஞ்சலியின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமா தான். இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்தப் படத்தில் அவர் ஆனந்தி என்ற கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன. தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ விரைவில் வெளியாக இருக்கிறது.

Also read… ’மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… விஜய் ஆண்டனி கருத்து!

இந்நிலையில் அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் பாலகிருஷ்ணா.

இந்த விழாவில் மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். ஆனால் இருவரும் அதை கவனிக்காமல் இருந்ததால் தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளினார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி, பின்னர் சுதாரித்துக் கொண்டு சிரித்தார். கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் கூட்டமும் இதை பார்த்து ஆராவாரம் செய்தனர்.

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் பாலகிருஷ்ணா குறித்த ட்ரோல்கள் குவிந்து கிடக்கின்றது. ஒற்றை விரலால் ரயிலை நிறுத்துவது, காரை எட்டி உதைத்து திருப்பி அனுப்புவது என படங்களில் பல அட்ராசிட்டிகளை செய்திருப்பார் பாலகிருஷ்ணா. இதன் காரணமாகவே இவர் நடிக்கும் படங்கள் இணையத்தில் அதிகளவில் ட்ரோல் செய்யப்படும். இந்நிலையில் நடிகை அஞ்சலியிடம் பாலகிருஷ்ணா நடந்துகொண்டது குடித்துவிட்டு போதையில் இவ்வாறு செய்தாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலகிருஷ்ணா அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் ஒரு வாட்டர் பாட்டிலும், இன்னொரு வாட்டர் பாட்டிலில் மது நிறத்தில் திரவம் இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த பாட்டிலில் இருந்தது மதுவா என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.

Latest News