Bigg Boss 8 Contestants: யார கேட்டு நீ பிக்பாஸ் வந்த… சாச்சனாவிடம் விஜய் சேதுபதி கேள்வி
நடிகை சாச்சனா இரண்டாவது போட்டியாளராக உள்ளே வந்துள்ளார். இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, 'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக சாச்சனா நேமிதாசின் எதார்த்தமான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது.
மகாராஜா படத்தில் நடித்த நடிகை சாச்சனா பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளராக வந்தபோது அவரிடம் யார கேட்டு நீ இங்க வந்த என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக 7 சீசனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிறார்.
வீட்டின் நுழைவிலேயே நடுவில் ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது. அதேபோல் போட்டியாளர்கள் மூன்று பேராக படுக்கும்படி மெத்தை போட்டு ஒரு படுக்கையறையும், தனித்தனியாக படுக்கும்படி மெத்தைகள் போட்டு ஒரு படுக்கையறை என மொத்தம் இரண்டு பெட்ரூம்கள் இருக்கின்றன. மேலும் கிச்சன், கன்ஃபெஷன் ரூம் என பல விஷயங்கள் டிசைன் மாறியிருக்கின்றன. அதுமட்டுமின்றி புதிதாக கோடு ஒன்று வந்திருப்பதால் ரூல்ஸில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது
முதலாவதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில் அடுத்ததாக நடிகை சாச்சனா இரண்டாவது போட்டியாளராக உள்ளே வந்துள்ளார். இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக சாச்சனா நேமிதாசின் எதார்த்தமான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது. ‘நீ யாரை கேட்டு வந்த..?’ என விஜய் சேதுபதி எடுத்தவுடன் ஒரு கேள்வியை கேட்டார். அதன் பின் அவரை பற்றிய சில விஷயங்களையும் மேடையில் பேசினார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என சில விஷயங்களை கூறினார்.
Also read… Bigg Boss 8 Contestants: பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக என்ட்ரி கொடுத்த ரவீந்தர்
குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்துள்ள சாச்சனா நேமிதாஸ் தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் தெரிவித்துள்ளார். எங்க வீட்டுல, நான், அப்பா, அப்பா எனக்கு 2 அக்கா. சாச்சனா தான் பார்க்க ஸ்கூல் பொண்ணு மாதிரி இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு நிஜத்தில் 21 வயது ஆகிறது என கூறி இருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாவுக்காக மகாராஜா படத்தில் நடித்திருந்தாலும், இப்போது எனக்கும் சினிமா மீது ஆர்வம் வந்து விட்டது. எனவே சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்தை எட்ட பிக்பாஸ் எனக்கு உதவும் என கூறியுள்ளார்.
மேலும் சாச்சனாவுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி, ‘உனக்கு எப்படி தோனுதோ அப்படி என்ன கூப்பிடு. அப்பானு கூப்ட தோனுச்சுனா அப்டி கூப்டு, இல்லை சார்னு கூப்ட தோனுச்சுனா அப்படி கூப்பிடு. ஆனால் சரியா விளையாடாம வார இறுதியில் வந்து அப்பா என சொல்லி என்னை ஏமாத்திடாத என தெரிவித்துள்ளார்.