Bigg Boss 8 Contestants: பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக என்ட்ரி கொடுத்த ரவீந்தர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களையும் வெளியே இருந்து பல யூடியூப் சேனல்களுக்கு விமர்சனம் செய்து வந்தார் ரவீந்தர். சில நேரங்களில் அது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இந்த 8-வது சீசனில் அவரே போட்டியாளராக கலந்துகொள்கிறார்.
கடந்த 7 சீசன் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராக இருந்த ரவீந்தர் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டாக்கிற்கு பொருத்தமாக பிக்பாஸ் தமிழ் 8-வது சீசனின் வீடு முற்றிலுமாக மாறியுள்ள நிலையில் தற்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளார். நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். யாருக்கும் தெரியாமல் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருப்பதியில் பெற்றோரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களின் திருமணம் இணையத்தில் பெரும் பேசு பொருளானது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களையும் வெளியே இருந்து பல யூடியூப் சேனல்களுக்கு விமர்சனம் செய்து வந்தார் ரவீந்தர். சில நேரங்களில் அது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இந்த 8-வது சீசனில் அவரே போட்டியாளராக கலந்துகொள்கிறார். கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரசேகர், திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைதான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு மாதத்திற்கு மேலாக புழல் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் பல்வேறு விதமான சேனலுக்கு யூடியூப் பேட்டி கொடுத்தார். அதில் தான் சிறையில் எப்படி கஷ்டப்பட்டேன் என்பதை உருக்கமாக பேசி இருந்தார்.
Also read… Bigg Boss Tamil House: பிக்பாஸ் வீட்டுக்கு நடுவில் கோடு… ஏதோ சூழ்ச்சி இருக்கு – விஜய் சேதுபதி!
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். அவரை வரவேற்ற விஜய் சேதுபதி முந்தைய சீசன்களின் விமர்சகராக இருந்தது குறித்து பேசுகிறார். அதில் நிறைய காசு சம்பாதிச்சீங்கனு கேள்விபட்டேன் என்று நக்கலாக அரங்கில் உள்ளவர்களை சிரிக்க வைக்கிறார்.
பின்னர் ரவீந்தர் குறித்த ஏவி வீடியோவை நிகழ்ச்சி குழு ஒளிபரப்பு செய்தது. அதில் பேசிய ரவீந்தர், எதுக்கு பிக்பாஸ் போறீங்க? அதான உங்க கேள்வி. என்ன தெரிஞ்சவங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச என்னோட இன்னொரு முகம் நான் ரொம்ப ஜாலியான ஆள். அந்த முகத்த இந்த தடவ நான் உங்களுக்கு காட்டப்போறேன். அதுக்கு இந்த பிக்பாஸ் வீட நான் வாய்ப்பா பாக்குறேன். பிக்பாஸ்கும் நமக்கும் என்ன பந்தம். கொஞ்சமா நஞ்சமா பொதுவா இரண்டாவது சீசன்ல இருந்து போன சீசன் வரைக்கும் ரிவியூ பன்னி இருக்கேன். அவ்வளவு அன்ப சேத்து வச்சு இருக்கேன். மக்களை மகிழ்விக்க ஒரு வாய்ப்பாதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிய பாக்குறேன். மத்தப்படி வீட்டுக்குள்ள போய் நான் என்னையே தேடுறேன், அத தேடுறேன், இத தேடுறன்றதுலாம் கிடையாது. அன்பு காட்றவங்கள அரவணைத்து போறது வெறுக்குறவங்கள ரசிக்க வைக்கிறதும் நம்மலால முடியும் என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.